முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 884

 நாட்டு மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு அரசு முன்வர வேண்டும்- ரணில் விக்கிரமசிங்க




கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையும், தொற்றால் மரணிப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துச் செல்கின்றது. எனவே, நாட்டை அரசு முழுமையாக உடன் முடக்க வேண்டும்.”


– இவ்வாறு முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான  ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.


நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு முன்னர் நாட்டு மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு அரசு முன்வர வேண்டும் எனவும் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-


“நாட்டில் ஒவ்வொரு பகுதிகளாக முடக்குவதால் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என்பதை நாம் இப்போது உணர்கின்றோம். எனவே, நாட்டை முழுமையாக முடக்கி, தேவையான மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும்.


ஜனாதிபதியும் அமைச்சரவையும் அரசமைப்பால் அவர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி கொரோனா நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தத் தேவையான திட்டங்களை எடுக்க வேண்டும்.


அரசு தொடர்ந்து நாட்டு மக்களுக்குத் தடுப்பூசிகளை வழங்கினாலும், இந்த ஆண்டில் அதனைச் செய்து முடிக்க இயலாது.


எனவே, நாட்டில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளில் முதலில் ஈடுபட வேண்டும்.


கடந்த ஆண்டு இலங்கை 200 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் தடுப்பூசி கொள்வனவுக்காகச் செலவிட்டிருந்தால் இன்று தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்காது.


மத்திய வங்கி பணத்தை அச்சிட்டதாலேயே இலங்கை ரூபா வீழ்ச்சியடைந்துள்ளது.


அந்நிய செலாவணியை அதிகரிப்பதில் மட்டுமே அக்கறை கொண்ட அரசு இந்திய சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு அனுமதித்ததால் இந்தக் கொரோனா வைரஸ் மேலும் பரவியது” – என்றுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?