தமிழர்கள் இறைமையுடன் வாழவே விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தினர் - நாடாளுமன்றில் ஒலித்த குரல்
மக்களை காப்பாற்றவே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை அழித்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்த கருத்தை முற்றாக நிராகரிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், தமிழர்கள் இறைமையுடன் வாழ வேண்டுமென்பதற்காகவே தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தியதாக தெரிவித்தார்.
அத்துடன் யுத்தத்தில் உயிரிழந்த போராளிகள் மற்றும் பொது மக்களுக்கு சபையில் அஞ்சலி செலுத்தி அவர் தனது உரையை நிறைவு செய்தார்.
கருத்துகள்