முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 830

 தன் உயிர் மாய்த்து பல உயிர்களை வாழவைத்த உன்னதமான மாமனிதன்…! 



தன் உயிர் மாய்த்து பல உயிர்களை வாழவைத்த உன்னதமான மாமனிதன்…! 

குடாரப்பு தரையிறக்கத்தின்போது ஓர் களமுனையில் எதிரிகளின் வளைப்பிற்குள் 150ற்கு மேற்பட்ட போராளிகள் சிக்கிக்கொள்கின்றனர்.அவர்களை மீட்க முறியடிப்பு அணியொன்றை வீதிக்கு அப்பால் அனுப்புவதில் எதிரியின் சினைப்பர் தாக்குதல் பெரும் இடையூறாக இருந்தது.


சினைப்பர் தாக்குதலை நடத்தும் எதிரி எங்கிருக்கிறான் என்று கண்டுகொள்வது அவ்வளவு இலகுவான காரியமல்ல..ஆனால் அவனால் புலிகளின் நகர்வை அவதானித்து தாக்கமுடிந்தது.


முற்றுகைக்குள் சிக்கியிருக்கும் வீரர்களை விரைந்து மீட்டு அவர்களை பாதுகாப்பாக பின்னுக்கு எடுக்கவேண்டிய இக்கட்டான நிலை ஏற்படுகிறது. அதனைக் கையாள அங்கிருந்த படையணிக்கு ஒரேயொரு மார்க்கமே இருந்தது.


யாராவது ஒருவர் வீதியைக் கடந்து ஓடவேண்டும். அப்போதுதான் சினைப்பர்காரனின் இருப்பிடத்தை அறியமுடியும்..அப்போது நான் போகிறேன் என்று ஓர் குரல்..அனைவருமே அதிர்ந்தனர்..


அவனைப் பார்த்த பொறுப்பாளர் “ரோட்டைக் கடந்து ஓடினால் அவன் கண்டிப்பாக அடிப்பான்” என்று கூறிமுடித்ததும் புன்னகைத்தபடி சென்ற அவ் இளம்வீரன் வீதியைக் கடக்கும்போதே ரவை அவனது உயிரைப் பறிக்க அவ்விடத்தில் வீரமரணம் அடைகிறான்..


சினைப்பர்காரனின் இருப்பிடமறிந்து தாக்குதல் நடத்தி அத்தனை வீரர்களையும் பாதுகாப்பாய் பின்னகர்த்தினர். அத்தனைபேரையும் காத்துவிட்டு அந்த வீரன் ஆனையிறவு மீட்புச் சமரின் வெற்றியைத் தாங்கிய தூண்களில் ஒன்றாய் நிமிர்ந்தான்.


ஈழம் இதயத்துள் இமயத்தையும் மிஞ்சி நெஞ்சை நிமிர்த்தி நின்றிட இவன் போல் எத்தனை எத்தனை தியாகங்கள் எழுதப்படாத காவியங்களாய் எம்முள் மௌனித்துள்ளன.


வீரவணக்கம்.


-வன்னியூரான்-

நந்திக்கடல் நாணல்கள்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?