யாழில் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்! பெரும் சோகத்தில் குடும்பத்தினர்
யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற கார் விபத்தில் வடமராட்சி வல்வெட்டித்துறை இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மூன்று தினங்களுக்கு முன்னர் கார் மரத்துடன் மோதியதில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மோகனதாஸ் திலீபன் [வயது 32 ] சிகிச்சை பயனின்றி நேற்று உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்