அழித்தவனிடம் அனுமதி கோரும் துர்ப்பாக்கியம்!! அரசின் பதில் என்ன?
மிகப் பெரிய தமிழின படுகொலையின் சாட்சியாகிய முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இனப்படுகொலைக்கு உள்ளாக்கியவர்களே இரவோடு இரவாக இடித்து அகற்றியது பாசிச ஆட்சியின் வெளிப்பாடாக உள்ளது என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி சேதமாக்கப்பட்டமை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
அழுவதற்கு கூட அழித்தவனிடம் அனுமதி கோரும் துர்ப்பாக்கிய நிலையில் தமிழர்களின் வாழ்வியல் காணப்படுவதே மிகுந்த துர்ப்பாக்கியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
1 இலட்சத்து 46 ஆயிரத்து 679 பேருக்கான பதிலை அரசு என்றோ ஒரு நாள் வழங்க வேண்டும் என சிவகரன் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துகள்