முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 887

 ராஜிவ்காந்தியின் சுயவாக்குமூலம்…!



மது அறிவுசீவிகள், சாய்வுநாற்காலி சிரஞ்சீவிகள் எல்லோரும்…


ராஜிவ் அப்போது கொண்டுவந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருந்தால் இந்த அழிவு வந்திருக்காது அது இது என்று….!

இந்த தோல்விக்கான காரணங்களை கண்டுபிடித்து பதிவதில் தமது மேலான பெயர்களும் வரலாற்றில் இருந்துவிட வேணுமென்ற பெரும் எத்தனத்தில் அவரவர் தத்தமது நிறைகளுக்கேற்ற தராசுகளில் இவற்றை எடைபோட்டு காரணங்களை எழுதி குவிக்கிறார்கள்.

பல்லாயிரம் காரணங்கள்.. மாட்டுக்கறி சாப்பிட்டதால்தான் தோற்றார்கள் என்பது முதல் பூகோளஅரசியல் வகுப்புகள் வரை இந்த காரணங்கள் நீளுகின்றன. எல்லா காரணங்களிலும் ஒரு காரணம் அதிகமாக சொல்லப்பட்டு இருக்கும்.


அதுதான் ராஜிவ் கொண்டுவந்த ஒப்பந்தத்தை ஏற்றிருந்தால் இந்த அழிவு ஏற்பட்டிருக்காது..

இந்தியதேசத்தின் உள்நாட்டுஅமைச்சர், நிதிஅமைச்சர் போன்ற பெரும் பொறுப்புகளில் இருந்த ப.சிதம்பரம் முதல் புலிக்காய்ச்சல் புனைவு எழுத்தாளர்வரை கொட்டித்தீர்க்கும் காரணம் இதுவே.

ஏதோ ராஜிவ்காந்தி கொண்டுவந்த ஒப்பந்தம் தமிழர்களுக்கு எல்லாவித நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்று என்பதுபோல இவர்கள் கதைப்பதற்கு அதே ராஜிவ்காந்தியின் ஒப்பந்தசரத்துகளின் ஓட்டைகளை நாம் காட்ட முடியும்.

அல்லது பலாலிக்கு தலைவர் பிரபாகரன் வரும்போது அவரை சுட்டுக்கொல்ல டெல்லியில் இருந்து வந்த உத்தரவை பற்றி வடபகுதி இந்தியதளபதி சொன்னதை மேற்கோள் காட்டி இந்த ஒப்பந்தத்தின் உள்நோக்கம் பற்றி சுலபமாக புரியவைக்கமுடியும்.

ஆனால் அது எல்லாவற்றையும்விட ஒப்பந்தத்தை தயாரித்து அதில் ஒப்பமிட்ட ராஜிவ்காந்தி 1990 ஓகஸ்ட்மாதம் 19ம்திகதி இந்தியா ‘சண்டே’இதழுக்கு கொடுத்த பேட்டியில்

1987 ல் ஏன் விடுதலைப்புலிகளுடன் இந்தியா யுத்தத்தில் ஈடுபட்டது என்ற கேள்விக்கு

‘ அது சிறீலங்காவின் இறையாண்மை ஒருமைப்பாடு என்பனவற்றை காப்பதற்காகவே இந்தியப்படை விடுதலைப்புலிகளுடன் யுத்தத்தில் ஈடுபட்டது என்று கூறியுள்ளார்.

ஆக ஒப்பந்தம் தமிழர்களின் உரிமைக்காக அல்ல.. சிறீலங்காவின் இறையாண்மையை காக்கவே.


– ச.ச.முத்து-

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?