யாழில் 6 வயது சிறுவன் பரிதாபகரமாக பலி
யாழ் போதனா வைத்தியசாலையில் திடீர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 6 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
உடுபிட்டி நாவலடியைச் சேர்ந்த பஜிதரன் சப்திகன் (வயது-6) என்ற உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த மூன்று நாட்களாக சிறுவனுக்கு காய்ச்சலுடன் கடும் உடல் சோர்வு ஏற்பட்டதால் நேற்று இரவு 9.30 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். இந்நிலையில் சிறுவனின் உயிரிழப்புக்கு காய்ச்சலே காரணம் என மருத்துவக் குறிப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பரிசோதனைக்கு பின்னர் சிறுவனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் சிறுவனின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்