முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 891

 கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்கு அதிகரிக்கனுமா? சாப்பிட்டு குப்பையில் வீசும் இந்த கொட்டை போதும்!

கொரோனா பரவல் காரணமாக பெரும்பாலானோர் பண்டைய கால உணவு முறைக்கு மாறி வரும்கின்றனர்.


  நாம் இழந்த உணவுகளை மீட்டெடுக்க இது மிகச் சிறந்த காலம். பலாப்பழ கொட்டைகளை கொண்டு ருசியான உணவு வகைகளை செய்யலாம்.


இதில் துத்தநாகம், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளது. இதனால் உங்கள் திசுக்களுக்கு வலிமையையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்குகிறது என கூறியுள்ளார்.


இதன் நன்மைகள் குறித்து அவர் கூறிய தகவல்களை நாம் இங்கு தெரிந்து கொள்வோம்.


செரிமானத்தை மேம்படுத்தவும்


பலாப்பழ கொட்டைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, பலாப்பழ விதைகள் மலச்சிக்கல் மற்றும் பிற செரிமான பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கும் என அறியப்படுகிறது. எனவே பலாப்பழ கொட்டைகளை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி வயிற்றுப்போக்கு பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கும்.


பார்வை திறன் அதிகரிக்கும் 


பலாப்பழ கொட்டைகளில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது, இது பார்வை திறனை அதிகரிக்க உதவுகிறது மற்றும் கண்புரை, மாகுலர் சிதைவு எனும் கண் பிரச்சனைகளை தடுக்கிறது.


பாலியல் இன்பத்தை அதிகரிக்கும்


பலாப்பழ கொட்டைகளில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. இது பாலியல் இன்பத்தைத் தூண்டுகிறது என்று நம்பப்படுகிறது. இந்த கொட்டைகள் பாலியல் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க பாரம்பரிய ஆசிய மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகின்றன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. 


வயதான தோற்றத்தை தடுக்கிறது


பலாப்பழ விதைகளில் காணப்படும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் வயதான தோற்றம், சரும சுருக்கங்களுக்கு எதிராக போராடுகிறது. பொலிவான சருமத்தை பெற, நீங்கள் பலாப்பழ கொட்டைகளை குளிர்ந்த பாலுடன் அரைத்து உங்கள் சருமத்தில் தொடர்ந்து அப்ளை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.


பலாப்பழ கொட்டையில் உள்ள வைட்டமின் ஏ சத்து, முடி உடைவதைத் தடுக்கிறது. இந்த கொட்டையில் உள்ள அதிகமான புரதச் சத்து, முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. இரும்பு சத்து இந்த கொட்டையில் அதிகம் உள்ளதால், இரத்த ஓட்டம் அதிகரித்து, உச்சந்தலைக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. இதனால் உங்கள் கூந்தல் ஆரோக்கியமாக வளர்கிறது.


இரத்த சோகையைத் தடுக்கிறது


இரும்புச் சத்து நிறைந்த இந்த விதைகள் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த உதவுவதால் இரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள் பலாப்பழ கொட்டைகளை அதிகம் சாப்பிடலாம். மேலும் பலாப்பழ கொட்டையில் உள்ள மங்கனீஸ் , இரத்தம் உறைதலை சீராக்குகிறது என்று கூறப்படுகிறது. எனவே உங்கள் அன்றாட உணவில் பலாப்பழ கொட்டைகளை சேர்த்து கொள்ளுங்கள். 


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?