ஆயிரத்து 300 ஐ நெருங்கியது இலங்கையின் கொவிட் பலி
இலங்கையில் மேலும் 29 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,298 ஆக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இன்றைய தினம் 2,325 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்