முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 863

 இஸ்ரேல் அதிபரின் அசத்தல் செயல்; வியந்துபோன இந்தியர்கள்!




இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. காசா முனை மற்றும் மேற்கு கரை என்று மொத்தம் இரண்டு பகுதிகளாக பாலஸ்தீனம் உள்ளது. காசா முனையை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது.

 

இதற்கிடையில், இஸ்ரேலுக்கும், காசாமுனையில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த 10-ம் தேதி முதல் மோதல் வெடித்தது. இருதரப்பினரும் மாறி மாறி ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.


அதில் கடந்த 11-ம் தேதி இஸ்ரேலின் அஷ்கிலான் நகரத்தை குறிவைத்து காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அஷ்கிலான் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ‘கேர்கிவ்வர்’ பணியாற்றிவந்த கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்த சௌமியா (30) என்ற உயிரிழந்தார்.


சௌமியா தான் பணிபுரிந்து வந்த வீட்டில் இருந்து கேரளாவில் உள்ள தனது கணவர் சந்தோஷ் இடம் வீடியோகால் மூலம் பேசிக்கொண்டிருந்தபோது ராக்கெட்ட் தாக்குதலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சௌமியாவுக்கு 9 வயதில் ஒரு மகன் உள்ளார்.


இதனை தொடர்ந்து உயிரிழந்த சௌமியாவின் உடல் இஸ்ரேலில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கடந்த 15-ம் தேதி அவரது சொந்த ஊரான கேரளாவின் இடுக்கி மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் சௌமியாவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.


இதையடுத்து, இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு சௌமியாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. சௌமியாவின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் இஸ்ரேலுக்கான தென்இந்திய தூதர் ஜானத்தன் சட்ஹா நேரில் பங்கேற்றார்.

 

இந்நிலையில், ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்த சௌமியாவின் குடும்பத்தினரை இஸ்ரேல் அதிபர் ரேவென் ரிவ்லின் இன்று தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, சௌமியாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இஸ்ரேலிய அதிபர் ஆறுதல் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலிய அதிபர் சௌமியாவின் குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசினாரா? தொலைபேசி உரையாடலா? என்ற விவரம் வெளியிடப்படவில்லை.


ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலில் உயிரிழந்த கேரளவை சேர்ந்த பெண் சௌமியாவின் குடும்பத்தினரை இஸ்ரேலிய அதிபர் தொடர்பு கொண்டு பேசிய நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?