கோவிட் பேரிடர் கால நிதியாக ஆஸ்திரேலிய அரசு இலங்கைக்கு 55 லட்சம் டொலர்களை வழங்குவதாக ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் Marise Payne தெரிவித்துள்ளார்.
இந்து சமூத்திர பிராந்திய நாடுகளில் பரவலடைந்துள்ள கோவிட் தொற்றினை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு ஆஸ்திரேலிய அரசு ஒதுக்கீடு செய்துள்ள நிதியின் ஒரு அங்கமாக இந்த உதவி வழங்கப்படுவதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.
படகுப் பயணங்களை முறியடிப்பதற்கு இலங்கைக்கு ட்ரோன்களை வழங்கியுள்ள ஆஸ்திரேலியா!
கோவிட் பேரிடரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான இலங்கைக்கு ஆஸ்திரேலியா புதிதாக அறிவித்துள்ள 55 லட்சம் டொலர்களுடன் மொத்தம் ஒரு கோடி 17 லட்சம் டொலர்களை வழங்கியுள்ளது.
கோவிட் பேரிடரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான இலங்கை அதனை எதிர்த்து போராடி பாதுகாப்பான சூழலை மீளக்கொண்டுவருவதற்கு ஆஸ்திரேலியா எப்போதும் துணை நிற்கும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ள இந்த புதிய நிதி அதன் ஒரு அங்கமே எனவும் இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் David Holly தெரிவித்துள்ளார்.
இதுதவிர நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கும் ஆஸ்திரேலிய அரசு சுமார் ஒரு கோடியே 20 லட்சம் டொலர்களை கோவிட் பேரிடர் கால நிதியுதவியாக வழங்கியுள்ளது.
கருத்துகள்