முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 867

 சீனாவுக்கு எதிராக இலங்கை ஆயுதப் போராட்டம் நடத்த வேண்டிய காலம் வரும்! பகிரங்க எச்சரிக்கை


 தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஸ்ரீலங்கா படை ஆயுதப் போரில் ஈடுபட்டதுபோல வெகுவிரைவில் போர்ட் சிட்டி நிலத்தை மீட்பதற்காக சீனாவுக்கு எதிராக ஸ்ரீலங்கா போர் தொடுக்கும் நிலைமை ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தென்னிலங்கையைச் சேர்ந்த பிரபல மனித உரிமை செயற்பாட்டாளரும், சிவில் அமைப்பைச் சேர்ந்தவருமான சமீர பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.


ஈஸ்டர் தாக்குதலை நினைவுகூரும் வகையில் கொழும்பு மருதானையிலுள் சி.எஸ்.ஆர் மண்டபத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற விசேட செயலமர்வில் பேசும் போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,


சர்வதேசத்தை நாம் எதிர்த்துக் கொள்ளக்கூடாது. கடந்த காலங்களாக சிவில் அமைப்புக்களை டொலர்களுக்கு அடிபணிகின்றவர்கள் என்றும், அரச சார்பற்ற நிறுவனங்களின் சர்வதேச சூழ்ச்சிகள் என்றும் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகைக்கூட தெரிவித்திருந்தார். ஆனால் இன்று என்ன நடந்திருக்கின்றது? ஈஸ்டர் தாக்குதல் குறித்து உள்நாட்டு விசாரணையில் திருப்தி இல்லாவிடத்து சர்வதேசத்தை நாடப்போவதாக அவரே அறிவித்திருக்கின்றார்.


இன்று போர்ச் சூழல் இல்லை. இருப்பினும் தீவிரவாத செயலினால் நூற்றுக்கணக்கானவர்கள் ஈஸ்டர் தாக்குதலில் பலியாகியிருக்கின்றனர். பௌத்த தர்மத்திற்கு முதலிடம் வழங்குகின்ற நாடாகிய ஸ்ரீலங்கா இன்று இந்த தாக்குதல் பற்றிய முழுமையான உண்மையான விசாரணையை நடத்தியாக வேண்டும்.


2019ஆம் ஆண்டு என்பது சாத்தானை நோக்கிய ஸ்ரீலங்காவின் பயணமாகவே கருதப்படுகின்றது. ஜனநாயகத்திற்கெதிரான கொடுங்கோல் ஆட்சியே உருவாக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் ஈஸ்டர் தாக்குதல் குறித்து சர்வதேசத்தின் சூழ்ச்சியொன்று இருக்கின்றது என்பது சட்டமா அதிபர், ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்திருக்கின்றதென்றால் எமக்கும் அதன் மீது சந்தேகம் காணப்படுகின்றது.


கடந்த 02 தினங்களுக்கு முன்னதாக முதலாவது, இரண்டாவது, மூன்றாவதும் எனது தாய்நாடே பிரதானம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார்.


ஆனால் எதிர்காலத்தில் போர்ட் சிட்டியை சீனாவிடத்திலிருந்து காப்பாற்றுவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஆயுதப் போரில் ஸ்ரீலங்கா படை ஈடுபட்டதுபோல மீண்டும் யுத்தத்தில் ஈடுபடவேண்டிய அபாயம் ஏற்படும் என்றார்.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?