லண்டனில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ஈழத் தமிழ் இளைஞர்கள்!
பாலஸ்தீன மக்களுக்கு எதிரான மிருகத்தனமான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர பிரித்தானியா அரசு உடனடி நடவடிக்கை' எடுக்க வேண்டும் என்று ஆயிரக்கணக்கான மக்கள் மத்திய லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் ஈழத் தமிழ் இளைஞர்களும் கலந்து கொண்டு, தமிழர்களின் பெரும் ஆதராவு பாலஸ்தீனர்களுக்கு உண்டு என்பதனை நீரூபித்துள்ளார்கள்.
லண்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு வெளியே பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக திரண்ட மக்களில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கூட்டத்தை கலைக்க முற்படும் போது 9 அதிகாரிகள் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
வன்முறை சீர்கேடு என்ற சந்தேகத்தின் பேரில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர், மேலும் நான்கு பேர் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்திய லண்டன் வழியாக அணிவகுத்துச் சென்றனர். மிருகத்தனமான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர பிரித்தானியா அரசிடமிருந்து உடனடி நடவடிக்கை தேவை என்று அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஷேக் ஜார்ரா சுற்றுப்புறத்தில் இருந்து அரேபியர்களை வெளியேற்ற முயற்சித்ததில் தொடங்கிய வன்முறை சுழற்சியின் பின்னர், 39 குழந்தைகள் உட்பட, காசா பகுதியில் குறைந்தது 139 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கென்சிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தின் வாயில்களுக்கு வெளியே வருவதற்கு முன்பு கூட்டத்தினர் ஹைட் பார்க் வழியாக அணிவகுத்துச் சென்றனர்.
கருத்துகள்