விடுதலைப்புலிகளின் தலைவரால் முடியாததை ஆளும் தரப்பு செய்யுமா? விடுக்கப்பட்டது சவால்
விடுதலைப்புலிகளின் தலைவர் இந்த நாட்டில் செய்ய முடியாது போனதை ஆளும் தரப்பினர் செய்வார்களா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என ஐக்கிய மக்கள் சக்தி சவால் விடுத்துள்ளது.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார , மேலும் கூறுகையில்,
துறைமுக நகர் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டால் இலங்கைக்குள் இரு நாடுகள் இரு ஆட்சி என்ற நிலைமை தோற்றம் பெற்று விடும்.
எனவே இவ்வாறான நிலைமை தோற்றம் பெறாமலிருப்பதற்கு ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவளிக்கக் கூடாது.
எனினும் பிரபாகரனால் செய்ய முடியாததை இந்த சட்ட மூலத்திற்கு ஆதரவளிப்பதன் மூலம் இவர்கள் செய்து விடுவார்களா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். அவ்வாறு செய்தால் அது நாட்டை காட்டிக் கொடுக்கும் செயலாகும் என மேலும் அவர் தெரிவித்தார்.
கருத்துகள்