இலங்கைக்குள் ஊடுருவியுள்ள 3 நபர்கள்- அமெரிக்க பெண்டகன் விடுக்கும் சிவப்பு எச்சரிக்கை !
அமெரிக்காவால் பிடிக்க முடியாத, மேலும் கண்கானிப்பில் உள்ள முக்கிய தீவிரவாதிகளின் நண்பர்கள் சிலர் இலங்கை சென்றுள்ளதாக நம்பப்படுகிறது. கொரோனா கால கட்டத்தில் இவர்கள் இந்தியா சென்று பின்னர் அங்கிருந்து இலங்கை சென்றுள்ளதாக அமெரிக்க பெண்டகன் மற்றும் CIA நிறுவனங்கள் நம்புகிறது. இதனை அடுத்து அமெரிக்க அரசுக்கு வழங்கப்பட்ட ஒரு ரகசிய தகவலை மையமாக கொண்டு. அமெரிக்க அரசு இலங்கையில் உள்ள தனது அமெரிக்க தூதுவர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக அறியப்படுகிறது.
இலங்கையில் சில வேளைகளில் தாக்குதல் நடத்தப்பட கூடும் என்றும். இதனால் அமெரிக்க தூதுவர்கள் வெளியே செல்வது நல்லது அல்ல என்ற தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனை மிகவும் சூசகமாக கையாண்டுள்ள அமெரிக்க அரசு. தனது குடி மக்களை கொரோனாவைச் சாட்டி எச்சரித்துள்ளதே தவிர. பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக குடி மக்களுக்கு எந்த ஒரு எச்சரிக்கையையும் அமெரிக்கா விடுக்கவில்லை.
அமெரிக்கா கண்காணித்து வரும் சில முஸ்லீம் பயங்கரவாதிகளின் , நண்பர்கள் எவ்வாறு இந்தியா சென்று ஊடுருவினார்கள் என்பது பெரும் கேள்விக் குறி. ஏன் எனில் இதன் பின்னணியில் இந்தியா உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இலங்கை விடையத்தில் இந்தியா தற்போது மிகவும் மெளனம் காத்து வருவதும். இது புயலுக்கு முந்தைய அமைதி என்று கூறவும் வாய்ப்புகள் உள்ளது. எனவே பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். அமெரிக்க காங்கிரஸ் சபைக்கு வழங்கப்பட்ட அறிக்கையில் இலங்கை தொடர்பாக சில மட்டுப் படுத்தப்பட்ட தகவல்களே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
கருத்துகள்