முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 902

 சவேந்திர சில்வாவை தடை செய்ய பிரித்தானிய தொழில்கட்சி அதிரடி நடவடிக்கை


சிறிலங்காவின் இராணுவத்தளபதியும் யுத்தக்குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவருமான ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக பிரித்தானிய அரசு, தனது உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகார சபையின் (Global Sanction Regime) கீழ், பயணத்தடை உள்ளிட்ட தடைகளை விதிக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பிரித்தானிய தொழில் கட்சி சார்பில், ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களுக்கான பிரித்தானியாவின் நிழல் அமைச்சரான மதிப்பிற்குரிய ஸ் ரீபன் கினொக் அவர்கள் (Rt. Hon. Stephen Kinnoc MP) கோரிக்கை விடுத்துள்ளார்.


தென்னாசிய மற்றறும் பொதுநலவாய நாடுகளிற்கான அமைச்சரான மதிப்பிற்குரிய தாரிக் அஹமட் பிரபு (The Lord Ahamed of Wimbledon) அவர்களுக்கு இன்றய தினம் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


குறித்த கடிதத்தில் கடந்த ஏப்பரல் மாதம் ஜஸ்மின் சூக்கா தலைமையிலான ITJP இராணுவத்தளபதி சவேந்திரசில்வா தொடர்பில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிடம் சமர்ப்பித்திருந்த 50 பக்க குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்புட்டுள்ள விடயங்களை மேற்கோள்காட்டியுள்ள நிழல் அமைச்சர்,



 

இறுதி யுத்தத்தில் சவேந்திர சில்வா 58 ஆவது படைப்பிரிவின் இராணுவத்ததளபதியாக இருந்தார் என்பதற்கான ஆதாரங்களை குறித்த அறிக்கை வழங்குவதுடன் குறித்தயுத்தத்தில் அவருக்கும் அவரது படைகளுக்கும் இடையில் ஒரு கட்டளை தொடர்பு இருந்ததையும் அந்த அறிக்கை விவரிக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.


இந்த அடிப்படையில் சவேந்திர சில்வாவை தடைசெய்யும்படி கோரி, 01 மே 2021 அன்று இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையம் (ICPPG) யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் பிரித்தானிய அரசிற்கு அவசர வேண்டுகோள் விடுத்ததுடன், அனைத்து அமைப்புக்களையும் ஒன்றுணைந்து அழுத்தம் வழங்குமாறும் கோரியிருந்தனர்.


அத்துடன் ICPPG இன் இளையோர் அணியாகிய இரண்டாம் தலைமுறையினர் இதனை நடைமுறைப்படுத்த ஆரதவு தேடி இணையவழி கையெழுந்து போராட்டம் ஒன்றையும் ஆரம்பித்திருந்தனர்.


ஜெனீவாவில் ஐ.நா.வின் சமீபத்திய தீர்மானம் 46/1 க்கு பிரிட்டன் பென்ஹோல்டர் என்பதை நாங்கள் மரியாதையுடன் உங்களுக்கு நினைவூட்டுவோம், இது ஆதாரங்களை சேகரிக்க கட்டாயப்படுத்தியது,


“எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளுக்கு சாத்தியமான உத்திகளை உருவாக்க… மற்றும் உறுப்பினர் உட்பட தொடர்புடைய நீதி மற்றும் பிற நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தல். மாநிலங்கள், திறமையான அதிகார வரம்புடன் ”. இந்த உத்திகளில் சில்வா போன்ற நபர்களுக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளைப் பயன்படுத்த வேண்டும்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?