முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 865

 சிட்னியின் வடக்கு கரையோரப்பகுதியில் வாழ்ந்த நபர் ஒருவர் தனது வீட்டினுள் நுழையமுயன்ற ஒருவரைக் கொலைசெய்துவிட்டு சடலத்துடன் 15 ஆண்டுகள் வாழ்ந்துவந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.



Shane Snellman என்ற 39 வயது நபர் 2002 ம் ஆண்டு Bruce Roberts என்ற 46 வயது நபரின் வீட்டிற்குள் திருடுவதற்காக நுழைந்தபோது  அவர் Shane Snellman-ஐ துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளதாக மரணவிசாரணை அதிகாரி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.


Shane Snellman-இன் சடலத்தை தனது வீட்டிலேயே 15 ஆண்டுகள் Bruce Roberts மறைத்துவைத்திருக்கிறார்.

Bruce Roberts 2017ம் ஆண்டு மாரடைப்பு காரணமாக தனது வீட்டிலேயே மரணமடைந்துவிட்டார்.

பின்னர் Shane Snellman-இன் சடலத்தை வெளியே எங்கும் கொண்டு செல்லாது தனது வீட்டிலேயே 15 ஆண்டுகள் Bruce Roberts மறைத்துவைத்திருக்கிறார்.

சடலத்திலிருந்து வரும் துர்நாற்றத்தை மறைப்பதற்கு பலவித வாசனைத்திரவியங்களை பயன்படுத்தியிருக்கிறார்.

இப்படியாக சுமார் 15 ஆண்டுகள் Shane Snellman-இன் சடலத்துடன் வாழ்ந்துவந்த Bruce Roberts 2017ம் ஆண்டு மாரடைப்பு காரணமாக தனது வீட்டிலேயே மரணமடைந்துவிட்டார்.


இவரது வீட்டின் முன்புறம் பெருந்தொகையான கடிதங்கள் சேகரிக்கப்படாமல் தேங்கிக்கிடந்ததை அடுத்து சந்தேகமடைந்த அயலவர்கள் பொலிஸாருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து Bruce Roberts-இன் உயிரற்ற உடல் மீட்கப்பட்டது. அத்துடன் 13 துப்பாக்கிகளும் மீட்கப்பட்டன.


2018ம் ஆண்டு Bruce Roberts-இன் வீட்டை விற்கும் நோக்கில் அவரது உறவினர்கள் துப்பரவுப் பணிக்கென ஆட்களை நியமித்திருந்ததாகவும் அவர்களே Shane Snellman-இன் எச்சங்களை கண்டுபிடித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இதையடுத்து தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முடிவில் பலவித காரணங்களுக்காக பதுங்கி வாழ்ந்த Bruce Roberts தனது வீட்டிற்குள் நுழையமுயன்ற Shane Snellman-ஐ சுட்டுக்கொன்றிருக்கிறார் என தெரிவிக்கப்பட்டது.


போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் குற்றச்சாட்டில் சிறைசென்றிருந்த Shane Snellman அங்கிருந்து வெளியேறிய சில நாட்களில் Bruce Roberts-இன் துப்பாக்கிச்சூட்டில் மரணமடைந்ததாக குறிப்பிடப்படுகிறது.


எனினும் Bruce Roberts-இன் வீட்டிற்கு Shane Snellman திருடுவதற்காக சென்றிருக்க மாட்டார் எனவும் அவர்கள் இருவரும் ஏற்கனவே அறிந்தவர்களாக இருக்கக்கூடும் எனவும் Shane Snellman-இன் உறவினர்கள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?