முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 869

 முள்ளிவாய்க்கால் தூபி உடைப்பு! ஐ.நாவிடம் தமிழ் கட்சிகள் முக்கிய கோரிக்கை

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி கடந்த மே 12 ம் திகதி விசமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்ட நிலையில், இராணுவம் மற்றும் பொலிஸ் பாதுகாப்பில் இருந்த தூபி உடைக்கப்பட்டமைக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனது கண்டனத்தை வெளியிட்டிருந்தனர்.


இதனையடுத்து, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தில் இதை ஆவணப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் கடிதம் தயாரிக்கப் பட்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் கையொப்பம் பெறுவதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.


இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டுள்ளனர்.


இக்கடிதம் ஐ.நாவிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ஹாநா சிங்கர் மூலமாக ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகருக்கு ஆவணப்படுத்தக் கோரி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


" 2009 மே 18ல் முடிவடைந்த கொடிய யுத்தத்தில் கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூருமுகமாக முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவுத் தூபி அண்மையில் அரச படையினரால் உடைத்து சேதமாக்கப் பட்டுள்ளமை, எமது உயிரிழந்த மக்களை நினைவு கூரும் உரிமையை அவமதிப்பதாகவே உள்ளது.


இது ஒரு வெட்கக்கேடான மனித குலத்துக்கு எதிரான செயல்பாடு. உலகில் உள்ள எவ்வகையான வலிமை பொருத்திய இராணுவத்தாலும் சின்னங்களை அழித்தாலும் மக்கள் மனதில் இருக்கும் சம்பவங்களையும், நினைவுகளையும் அழிக்க முடியாது.


இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை ஆத்திரத்துடனும், மனவேதனையுடனும், விரக்தியுடனும் தமிழ் மக்களின் பிரதிநிகளாகிய நாம் பதிவு செய்கிறோம்.


நினைவேந்தல்கள் தொடர்பாக அண்மையில் ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கும் மனித உரிமைக்கும் எதிரான இந்த விடயத்தை ஆவணப் படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த கடிதத்தில், நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன், பா.உ. தலைவர் த.ம.தே. கூ. மனோ கணேசன், பா.உ. தலைவர், த. மு. கூ செல்வம் அடைக்கலநாதன் ,பா. உ . த.தே. கூ த. சித்தார்த்தன், பா. உ த.தே. கூ எம். ஏ. சுமந்திரன் ,பா. உ. த.தே.கூ கோ. கருணாகரம் (ஜனா) ,பா. உ த.தே.கூ சி. சிறிதரன், பா.உ த.தே.கூ ஐ. சாள்ஸ் நிர்மலநாதன், பா.உ த.தே.கூ எஸ். வினோ நொகரதலிங்கம், பா.உ த.தே.கூ சா. இராசமாணிக்கம் ,பா.உ த.தே.கூ த. கலையரசன் ,பா.உ த. தே. கூ வி. இராதாகிருஷ்ணன், பா.உ த.மு.கூ எம். வேலு குமார் ,பா.உ த.மு.கூ ஈகியுார் கையொப்பமிட்டு அனுப்பி வைத்துள்ளனர். 


தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள்  கையொப்பமிடவில்லை.


அத்துடன் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் மற்றும் திகாம்பரம் ஆகியோர் சுகவீனம் காரணமாக நாடாளுமன்றத்துக்கு சமூகமளிக்காமையால் அவர்கள் ஒப்பம் பெறப்படவில்லை. இருப்பினும் அவர்களுக்கும் இதில் உடன்பாடு உண்டு என்ற நிலையில் இக்கடிதம் அனுப்பி வைக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?