முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 854

 ஏமாற்றிய புருஷன், கடைசியில் மருந்துக்கு கூட காசில்லாமல் இறந்த ஸ்ரீவித்யா


தமிழ் சினிமாவில் ஒரு குறிப்பிட்ட சில நடிகைகளே காலம் கடந்தும் ரசிகர்கள் மறக்க மாட்டார்கள். அந்த வகையில் இடம் பிடித்தவர் தான் ஸ்ரீவித்யா. அழகு ராணியாக தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்தவர். தான் ஹீரோயினாக நடித்த அனைத்து நடிகர்களுடனும் அடுத்தடுத்த காலகட்டங்களில் அக்கா, அண்ணி, அம்மா போன்ற கதாபாத்திரங்களிலும் நடித்தார்.

 

இப்படிப்பட்ட ஸ்ரீவித்யா தன்னுடைய வாழ்க்கையில் எல்லோரையும் நம்பி ஏமாந்து கடைசியில் மருத்துவச் செலவுக்கு கூட பணம் இல்லாமல் பாவமாக இறந்த சம்பவம் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஸ்ரீவித்யா மற்றும் கமல் ஆகிய இருவருக்கும் காதலென அந்த கால பத்திரிகைகளில் பரபரப்பாக எழுதப்பட்டது.


இதுகுறித்து கமலிடம் கேட்டபோது அது ஸ்ரீவித்யாவின் வயசு கோளாறு என்று கூறி விலகிய ஆதாரங்கள் உள்ளன. கமல் மேல் தீராக்காதலில் இருந்த ஸ்ரீவித்யா அதிலிருந்து மீள முடியாமல் தவித்து வந்த சமயத்தில் தான் மலையாள நடிகர் ஒருவரின் அரவணைப்பு அவருக்கு கிடைத்துள்ளது.


சரி அவரை திருமணம் செய்து கொண்டு குடும்பம் குட்டி என செட்டில் ஆகிவிடலாம் என கனவு கண்ட ஸ்ரீவித்யாவை நிம்மதியாக இருக்க விடாமல் சினிமாவில் நடிக்க வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என அவரது கணவர் தாமஸ் டார்ச்சர் செய்துள்ளார்.


இது ஒரு கட்டத்தில் பிரச்சினையை எழுப்ப இருவரும் விவாகரத்து செய்துகொண்டு பிரிந்துவிட்டனர். அதன்பிறகு குழந்தை இல்லாமல் இருந்த ஸ்ரீவித்யா தன்னுடைய மொத்த சொத்துக்களையும் டிரஸ்ட் ஆக மாற்றி விட்டார். அந்த சமயத்தில் வேறு மலையாள நடிகர் ஒருவர் அவருக்கு உதவி செய்து வந்தார்.

 

போதாக்குறைக்கு ஸ்ரீவித்யாவுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. அதற்காக சில விலை உயர்ந்த மருந்துகள் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் டிரஸ்ட் மூலமாக பெற்றுக்கொள்ள பலரும் அறிவுறுத்தியதால், அதுபற்றி டிரஸ்டை கவனித்து வந்த நடிகரிடம் கேட்க, அவர் யார் நீ? என்பது போல பேசி துரத்தி விட்டு விட்டாராம்.


அதன்பிறகு காலத்திற்கும் லோலோ என அலைந்து திரிந்து மருந்துக்குக் கூட காசு இல்லாமல் புற்றுநோயால் இறந்து விட்டார் என்பது போன்ற செய்திகளே தற்போது வரை பேசப்பட்டு வருகிறது. இடையில் கமலஹாசன் அவருக்கு உதவி செய்ததாகவும் ஒரு செய்தி உள்ளது.




கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?