உரப்பைக்குள் மயக்க நிலையிலிருந்த இளைஞன் மீட்பு
உரப்பையில் மயக்க நிலையில் காணப்பட்ட இளைஞன் ஒருவர் காலை மீட்கப்பட்டு தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
தம்புள்ளை நகரிலுள்ள கடை ஒன்றின் முன்பாக உரப்பையில் ஒருவர் கிடப்பதை அவதானித்த நபர் ஒருவர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். இதையடுத்து பிரதேச வாசிகள் மற்றும் பொலிஸார் இணைந்து குறித்த இளைஞனை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
மாவத்தகமவைச் சேர்ந்த காமினி திசாநாயக்க என்பரே குறித்த இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கருத்துகள்