முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 890

 இலங்கையில் தீவிரவாத அச்சுறுத்தல் மட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை! - அமெரிக்கா


இலங்கையில் தீவிரவாத அச்சுறுத்தல் மட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளது.


அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கடந்த திங்களன்று தமது நாட்டவர்களுக்காக இலங்கைக்கான புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையை வெளியிட்டது. அதில் இலங்கைக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.


கோவிட் காரணமாக இலங்கைக்கு பயணம் செய்ய வேண்டாம். அத்துடன் தீவிரவாதம் காரணமாக இலங்கையில் அதிக எச்சரிக்கை உள்ளது என்று அந்த புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் இது தொடர்பில் தெளிவுப்படுத்தியுள்ள இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம், நாட்டில் நிலவும் கோவிட் நிலைமை தொடர்பிலேயே இலங்கைக்கான பயண ஆலோசனை நிலை 3 இல் இருந்து நிலை 4 க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளது.


இதனை தவிர ஏற்கனவே உள்ள தீவிரவாத அச்சுறுத்தல் மட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று தூதரகம் தெரிவித்துள்ளது.


கோவிட் காரணமாக இலங்கைக்கான 4ம் நிலை பயண சுகாதார அறிவிப்பை அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டிருந்தது, இது இலங்கையில் மிக உயர்ந்த கோவிட் தொற்றை குறித்துநிற்கிறது. 

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?