50 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு AstraZeneca தடுப்பூசி வழங்கப்பட்டுவரும் நிலையில் 50 வயதுக்கு குறைந்தவர்களுக்கு Pfizer தடுப்பூசியே சிறந்தது என பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
அறிமுகமாகும் கொரோனாவுக்கான Moderna தடுப்பூசி பிற தடுப்பூசிகளைவிட வித்தியாசமானதா?
அத்துடன் 50 வயதுக்கு குறைந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையிலேயே Pfizer தடுப்பூசி வழங்கப்பட்டது.
இந்நிலையில் நாளை முதல் 40-49 வயதுக்குட்பட்ட எவரும் முன்னுரிமை அடிப்படையில் அல்லாமல் சாதாரணமாகவே Pfizer தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முடியுமென விக்டோரிய அரசு அறிவித்துள்ளது.
Pfizer தடுப்பூசி விக்டோரியாவின் அனைத்து தடுப்பூசி மையங்களிலும் கையிருப்பில் இல்லை என்பதால் இதனைப் போட்டுக்கொள்ள விரும்பும் 40-49 வயதுக்குட்பட்டவர்கள் 1800 675 398 என்ற இலக்கத்தை அழைத்து முன்பதிவு செய்வது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் AstraZeneca தடுப்பூசியை தொடர்ந்தும் தடுப்பூசி வழங்கும் மையங்கள் ஊடாகவும் இத்திட்டத்தில் பங்கேற்கும் மருத்துவ மையங்கள் ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.
விக்டோரியாவிலுள்ள பல தடுப்பூசி மையங்கள் முன்பதிவு இல்லாமல் வரும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு AstraZeneca தடுப்பூசியை வழங்குகின்றபோதிலும் 1800 675 398 என்ற இலக்கத்தில் அழைத்து முன்பதிவு செய்வது விரும்பத்தக்கது என விக்டோரிய சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்