இலங்கைப் பெண் ஒருவர் இத்தாலி நாட்டின் நடுவீதியில் கணவாரால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்
இத்தாலி நாட்டின் ரோம் நகரில் வசித்து வந்த பெண் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக வீதியில் கணவாரால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொலைசெய்யப்பட்ட பெண் 40 வயது மதிக்கத்தக்க இலங்கைப் பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ரோம் நகரின் போர்ச்சுவென்ஸ் பகுதியில் கடந்த 29 ஆம் திகதி அந்த தமபதியினரி வாய் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு வீதியில் மனைவியை கணவர் கத்தியால் குத்தியுள்ளார்.
உடனடியாக நோயாளர் காவுவண்டி மூலம் புனித காமிலோ மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றபோது கொலை செய்த கணவன் அங்கு கத்தியுடன் நின்றுள்ளார் அவரைப் பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கருத்துகள்