தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இறுதி வலிந்து தாக்குதலில் என்ன நடந்தது…? மார்ச்09, 2018 ■2009 மாசித்திங்கள் 25 ஆம் நாள். இரவு 7.30 மணி இருக்கும். திடீர் என்று வோக்கிகள் அழைக்கின்றன. குறித்த இடம் ஒன்றை குறிப்பிட்டு ஒன்று கூடுவதற்கான கட்டளை சங்கேத மொழியாக வருகின்றது. குறித்த நேரத்தில் அனைவரும் குறித்த பகுதியில் ஒன்று கூடுகின்றனர். ஒன்றுகூட்டப்பட்ட இளநிலை தளபதிகள் அணித்தலைவர்கள் முன்னிலையில் அந்த கம்பீரமான குரல் ஓங்கி ஒலிக்கிறது. ” ஒவ்வொரு மூத்த தளபதிகளையோ அல்லது போராளிகளையோ நாம் இழந்த போதும் எமது போராட்டம் கைவிடப்பட வில்லை. தொடர்ந்தும் போராடி வெற்றிப் பாதைகளில் நாம் பயணித்துள்ளோம். இது உங்கள் அனைவருக்கும் தெரிந்த விடையம். ஆனால் இறுதி யுத்தம் என்று எதிரி எங்கள் மீது பாரிய நடவடிக்கைகளை சர்வதேசத்தின் முழுமையான பங்கோடு செய்து கொண்டிருக்கிறான். நாம் தென் தமிழீழம் தொடக்கம் இன்றைய களமுனை வரை பின்நகர்ந்து கொண்டே வருகிறோம். எம் போராட்டத்தின் பின்னடைவு எமது மக்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதுவரை களமாடி இந்த மண்ணில் வீழ்ந்த எங்கள் உறவுகளுக்கு நாம் கொடுக்கும் ஆறுதல் இ
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********