விழிப்புதான் விடுதலைக்கு முதற்படி!
“புலிகளால் வடக்கு கிழக்கையே இன உணர்வு ரீதியாக ஒன்றிணைக்க முடியவில்லை…..தமிழ் மரபு வழி மக்களையும் பல தேசிய இனங்களையும் இணைத்து புலிகளால் போராட முடியவில்லை” என கருத்திடும் உறவுகளுக்கான என் பதில்.
இல்லை என நீங்கள் சொல்வதால் இல்லை என்றாகி விடுமா?
“விடுதலைப் புலிகள் உலகத் தமிழ் மக்களை ஒன்றிணைத்து தமிழ் எழுச்சி கொள்ள வைக்கும் சக்தியாக திகழ்ந்தார்கள்!
இன்று தமிழ் மக்களால் அதிகம் போற்றப்படும் உன்னதமான தலைவராக தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் திகழ்கின்றார்!
தமிழர்க்கு முன்னொரு பொழுதும் இல்லாத எழுச்சி தமிழீழ விடுதலைப்புலிகள் போராட்ட காலத்தில் ஏற்பட்டது!
முன்னை மன்னர்கள் வைத்திருந்த படைகளை விஞ்சும் வகையில் தரைப்படை, கடற்படை மட்டுமன்றி வான்படை கொண்ட முதல் தமிழனாகவும், உலகெங்கும் தமிழ் மக்கள் படை கொண்ட தலைவராகவும் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் திகழ்கின்றார்!
தமிழீழ விடுதலை போராட்டம் தமிழ் மக்களை ஒன்றிணைக்கும் சக்தியாகவும் எழுச்சியும் வீரமும் பொருந்திய உலக போராட்டங்களை மிஞ்சும் வியக்கத்தகு அர்ப்பணிப்புகள் கொண்ட போராட்டமாகவும் திகழ்ந்தது!
போராட்டங்களில் தவறுகளும் நிகழ்ந்திருக்கலாம் ஆனால் எமது போராட்டம் தவறானது அல்ல.
தமிழ் மக்களே புலிகள். புலிகள் தமிழ் மக்கள் என காலம் மாறி வெகு நாளாயிற்று.
தவறுகள் ஆங்காங்கே நிகழ்ந்திருக்கலாம். ஆனால் சரி தவறுகள் கடந்து எங்கள் இனத்தின் விடுதலைக்காக நேர்மையாக உண்மையாக மாபெரும் எழுச்சியோடும் தீரத்தோடு போராடியவர்கள் தமிழீழ விடுதலை புலிகள்! அதை எவரும் மறுத்து விட முடியாது.
ஈழத்தில் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களை மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள தமிழ் உறவுகளையும் உள்வாங்கி, தமிழ் அறியாத தென்னாபிரிக்கா, பிஜி, மொரிசியஸ் என பல தமிழ் மரபு வழி மக்களை மட்டுமல்ல, மனிதம் உள்ள பல தேசிய இனங்களையும் இணைத்து போராடும் தன்மையை தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுத்த போராட்டம் முன்னகர்த்தியது என்பதை எவரும் மறுக்க முடியாது!” ” என்கிறேன். மறுக்கின்றீர்களா?
தவறுகள் நிகழவில்லை என நான் எங்கும் குறிப்பிடவில்லை. கண் மூடித்தனமாக புலி எதிர்ப்பு பரப்புரையை எம் போராட்டத்திற்கு எதிராக தொடர்ந்தும் சொல்லி வருபவர்கள் புலிகளை கொச்சை படுத்தவில்லை. போராட்டத்தையே கொச்சைப்படுத்துகின்றார்கள்.
அவர்களும் துருவமுனைப்படுத்தும் polarizing அரசியல் வாதமே முன்வைக்கிறார்கள்.
இன்று எம் தேவை போராட்டம். பழங்கதை பேசி உன்னதமான போராட்டத்தை கொச்சைப்படுத்தி நேர்மையாக போராடியவர்களை ஈகம் செய்தவர்களை கொச்சைப்படுத்துபவர்கள் எதிர்கால சிந்தனை உள்ளவர்கள அல்லர்.
இந்த பதிவினூடாக எம் உறவுகள் கருத்துக்களை வேண்டுகின்றேன்.
அதிலிருந்தேனும் இன்னமும் புலி எதிர்ப்பு பரப்புரை செய்து கொண்டு இருக்கும் எம் தமிழ் உறவுகள் எம் போராட்டத்தின் வலிமையை உணர்ந்து கொள்ளவார்களா?
உறவுகளே மேலே நான் எழுதிய கருத்து பற்றிய உங்கள் கருத்துக்களை நெஞ்சுக்கு நேர்மையாக எழுதுங்கள். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
தேசியத்தலைவரின்சிந்தனைத்துளி:
“விழிப்புதான் விடுதலைக்கு முதற்படி!”
உறவுகளே உங்கள் கருத்துக்களையும் பதிவிடுங்கள்! மக்கள் கருத்துக்களே போராட்டத்திற்கு எதிரான மாற்று கருத்து விதைப்பைகளை மாற்றி அமைக்கும்!
செந்தமிழினி பிரபாகரன்
கருத்துகள்