சிங்களவர்களின் மண்ட முதலாவது கருநாய் இரண்டவது சுமந்திரன் சத்தம் இல்லாமல் ஆலோசனை வளங்கும் திருட்டுப்பயல்
சுமந்திரன் - பீரிஸ் சந்திப்பின் பின்னர் தமிழர் தாயகத்தில் அரங்கேறும் இரகசிய செயற்பாடு -வெளிவரும் குற்றச்சாட்டு
காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகமான ,ஓஎம்பி நம் தாயகத்தில் மாயமாக திரும்பவும் தோன்றுகிறது என வவுனியாவில் கடந்த 1646 வது நாளாக போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர்கள்,
சுமந்திரன்-ஜிஎல் பீரிஸ் கலந்துரையாடலின் பிறகு, கிளிநொச்சியில் ஓஎம்பி அலுவலகங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. செப்ரெம்பர் ஐநா அமர்வுகளுக்கு முன்பு இந்த அலுவலகங்கள் பல இடங்களில் தோன்றுவதில் நாம் ஆச்சரியப்படக்கூடாது. இது இலங்கைக்கு ஐநா அமர்வில் அதிக கால அவகாசம் பெற சுமந்திரன் மற்றும் ஜிஎல் பீரிஸ் கூட்டின் சதியே.
சர்வதேச மனித உரிமைகள் குழு மற்றும் ஐநாவை சமாதானப்படுத்துவதற்கான சுமந்திரனின் தந்திரமே இந்த அலுவலகமாகும். 12 வருடங்கள் தமிழர்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறல் பெறுவதற்கு பொன்னான நாட்கள் இருந்தன. ஆனால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன் மற்றும் சம்பந்தன் தமிழர்களை ஏதோ காரணத்திற்காக வெறுக்கிறார்கள். அவர்கள் தமிழர்களை பழிவாங்குகிறார்கள்.
உலகில் எங்கள் போராட்டம் அதிக கவனம் செலுத்துகிறது. எமது போராட்டம் எமது மற்றய போராட்டங்களுக்கும் புத்துயிர் கொடுப்பதை சில தமிழ் அரசியல் வாதிகளும், சிங்கள புத்தி ஜீவிகளும் விரும்பவில்லை. காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளின் தாய்மார்கள் அனைவரும் சர்வதேச விசாரணைக்காகவும் அரசியல் தீர்வுக்காவும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவின் ஈடுபாடுவேண்டும் என்பதில் ஒன்றாக இருக்கவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
ஊழல் செய்த தமிழ் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து நாம் அனைவரும் இலங்கையால் அழிக்கப்படுவதற்கு முன், எங்களுக்கு ஒரு பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட தாயகத்தை பெறவேண்டும் என்றனர்.
கருத்துகள்