முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b266

 பின்லேடனின் கடைசி நிமிடங்கள் - நான்காவது மனைவி வெளியிட்ட பரபரப்பான தகவல்


அமெரிக்கப்படைகளால் சுட்டுக்கொல்லப்பட்ட அல்கொய்டா இயக்கத் தலைவர் பின்லேடனின் கடைசி நிமிடங்கள் எவ்வாறு இருந்தது என அவரின் நான்காவது மனைவி விரிவாக தெரிவித்துள்ளார்.


பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடன் 2011-ம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி அமெரிக்க படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார. அப்போது அவரது 4-வது மனைவி அமால் மற்றும் குழந்தைகள் அவருடன் உடன் இருந்தனர். அந்த நேர சம்பவம் தொடர்பாக அமால் ஏற்கனவே பேட்டி அளித்தி ருந்தார். இப்போது எழுத்தாளர்கள் ஸ்கொட் கிளார்க், அட்ரீயன் லெவி ஆகியோர் இணைந்து பின்லேடன் மரணம் தொடர்பாக புத்தகம் ஒன்று எழுதி உள்ளனர். அதில் பின்லேடன் மனைவி அமாலின் விரிவான பேட்டிகளும் இடம்பெற்றுள்ளன. அமால் அதில் கூறியிருப்பதாவது:-


மே 1-ம் திகதி இரவு உணவு முடிந்ததும், பாத்திரங்கள் சுத்தம் செய்யப்பட்டன. வழக்கமான இரவு தொழுகைக்கு பிறகு நானும், பின்லேடனும் மாடியில் இருந்த படுக்கை அறைக்கு சென்றோம். இரவு 11 மணி அளவில் பின்லேடன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அந்த நேரத்தில் திடீரென மின்சாரம் தடைபட்டது. பாகிஸ்தானில் அடிக்கடி மின்சாரம் தடைப்படும். எனவே நாங்கள் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.


சற்று நேரத்தில் எனது மனதில் ஏதோ ஒரு கலக்கம் ஏற்பட்டது. எனது தூக்கம் முற்றிலும் கலைந்துவிட்டது. அந்த நேரத்தில் வீட்டின் அருகே சத்தம் கேட்டது. அது பிரமையாக இருக்கும் என்று கருதினேன். சிறிது நேரத்தில் மாடியில் யாரோ ஏறுவதுபோல தோன்றியது.


எனவே எனக்கு பயம் ஏற்பட்டது. அதை உன்னிப்பாக கவனித்தேன். மின்சாரம் இல்லாமல் இருந்தாலும் யாரோ கடந்து போன நிழல் தெரிந்தது. இந்த நேரத்தில் சத்தங்கள் அதிகமானது. அந்நியர்கள் யாரோ உள்ளே வந்துவிட்டார்கள் என்று கருதினேன். இந்த நேரத்தில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்த பின்லேடனும் திடுக்கிட்டு எழுந்தார். அவர் முகத்தில் கலவரம் தெரிந்தது.


அந்த நேரத்தில் எங்களை யாரோ உற்றுப் பார்ப்பதையும், மேலே ஆட்கள் ஓடுவதையும் உணர்ந்தேன். சட்டென்று நாங்கள் இருவரும் அங்கிருந்து எகிறி குதித்து ஓடினோம். பல்கனி அருகே இருந்த கதவின் வழியாக பார்த்தோம். அப்போது அமெரிக்காவின் ஹெலிகொப்டர் வீட்டின் அருகே நின்றிருந்தது. சிறிது நேரத்தில் மற்றொரு ஹெலிகொப்டரும் அங்கு வந்தது. பின்லேடனின் மற்ற மனைவிகளும், குழந்தைகளும் 2-வது மாடியில் இருந்தனர். அவர்களும் கீழே வந்தார்கள்.



 

யாருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. நாங்கள் பயப்பட்டோம். அப்போது பின்லேடன், அவர்கள் என்னைத்தான் கொல்ல விரும்புகிறார்கள். உங்களை ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்று கூறினார். மனைவிகளையும், குழந்தைகளையும் வீட்டின் கீழ் தளத்திற்கு செல்லும்படி கூறினார். நான் அருகிலேயே அமர்ந்திருந்தேன். சிறிது நேரத்தில் அமெரிக்க வீரர்கள் பல்கனிக்கு வந்து விட்டனர். குழந்தைகள் அழுதனர். நான் அவர்களை சமாதானப்படுத்தினேன். அடுத்த சில நிமிடங்களில் எல்லாம் முடிந்து விட்டது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?