அணையாத தீபத்தின் அழியாத நினைவுகள் –அமல்ராஜ் ”திலீபண்ண” ஒரு தாயிற்கு மகனாக பிறந்தவர், ஆனால் மக்களின் மகனாக மரணித்தார் , அவருக்கு பிற்பட்ட காலத்தில் தாயகத்தில் எல்லாக்குடும்பங்களிலும் அவரும் ஒரு மூத்த மகன் அதனால் தான் திலீபண்ண என்று பாசமாக இன்றுவரை அவரை எல்லோரும் அழைக்கிறோம். அவரை அண்ண என்றுதான் கூப்பிட வேண்டும் என்டு யாரும் எமக்கு சொல்லி தந்ததில்லை , சாதாரண வாழ்வியல் உறவு நிலைக்குள் வரையறுத்துக்கொள்ள முடியாத உறவு நிலைக்கூடாக வந்த சொந்தம் அது. திலீபண்ண வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவனும் அல்ல , அவர் இருக்கிறபோது இந்த மண்ணில் பிறந்திருக்கவும் இல்லை, ஆனாலும் அவரின் வாழ்வை அந்த சூழல் என் போன்ற எல்லா குழந்தைகளுக்கும் கற்று கொடுத்தது , அவரின் நினைவு என்று நெஞ்சில் தூக்கி சுமக்க அவரின் தியாக புரட்சி எப்படி அழியாமல் இருக்கிறதோ அப்படிதான் அவரை வழிபட்ட நிகழ்வுகளும் அவரின் நினைவாக இருதயத்தில் அரித்துக்கொண்டு கிடக்கிறது. வீட்டில் , குடும்பத்தில் ஒருவராகி போனதால் அநேக வீடுகளில் அவரை பன்னிரு நாட்களும் வழிபடுவோம் , வீட்டு முற்றத்தில் அல்லது கண்டாயத்தில் சதுர வடிவில் சின்ன குடில் செய்து அதனை வெள்ளை சேலைய
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********