யாழ்ப்பாண பகுதியில் பரிதாபமாக உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்! பெரும் சோக சம்பவம்
Sri Lanka PoliceSri Lankan TamilsJaffna
4 hours ago
Shankar
யாழ்ப்பாணம் - சுன்னாகம், மயிலணி பகுதியில் மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் மயிலணி வடக்கு சுன்னாகம் பகுதியை சேர்ந்த 39 வயதான தேவராசா கமல்ராஜ் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த குடும்பஸ்தர் வீட்டில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்த நிலையில் அயல் வீட்டில் இருந்து மின்சாரம் பெற்று தண்ணீர் மோட்டார் பயன்படுத்திய போது மின்சார தாக்கியுள்ளது.
இதன் போது அவரை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்