f 155 இலங்கையில் முற்றாக சீர்குலைந்த சிவில் நிர்பாகம், அங்கே தேவையற்ற பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் உங்களிற்கும் இந்த நிலை வரலாம்?
கந்தளாயில் வானுடன் லொறி மோதியதில் பெண்ணொருவர் பலி
TrincomaleeSri Lanka Police InvestigationAccident
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********
கந்தளாய் -கிதுலுதுவ பிரதேசத்தில் வானுடன் லொறி மோதி இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்தானது இன்று (22.02.2024) மாலை இடம் பெற்றுள்ளது.
கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கிண்ணியா நோக்கி வந்து கொண்டிருந்த வான் எதிர் திசையாக மணல் ஏற்றிக்கொண்டு வந்த லொறியுடன் மோதியதினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது காயமடைந்தவர்கள் கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வானின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கமே விபத்துக்கு காரணம் என பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ள நிலையில் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கல்ஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கருத்துகள்