முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 120 உதவிரீதியாகதொடர்ந்து புறக்கணிக்கப்படும் தமிழ்ப் பிரதேசங்கள்.

 

அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டில் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்ட தமிழ்ப் பிரதேசங்கள்

அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டில் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்ட தமிழ்ப் பிரதேசங்கள் | Neglected Tamil Villages In Ampara

AmparaGovernment Of Sri LankaEastern Province
 4 hours ago
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

அம்பாறை மாவட்ட அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டில் குறிப்பாக தமிழ்ப் பிரதேசங்கள் திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“அம்பாறை மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலகங்கள் தமிழ்ப் பிரதேச செயலகங்களாக உள்ளதுடன் சம்மாந்துறை, பொத்துவில் என்ற அடிப்படையில் சுமார் ஏழு பிரதேச செயலகங்களில் தமிழ் மக்கள் வாழந்து கொண்டிருக்கின்றார்கள். 

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

குறைவான நிதி


மாவட்டத்தின் அபிவிருத்தியில் தமிழ்ப் பிரதேச செயலகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. குறிப்பாக கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தில் எந்தவிதமான கூட்டங்களும் நடைபெறவில்லை.

அப்பிரதேசத்திற்கென நிர்வாகம் இருக்கின்றது. பிரதேச செயலாளரும் இருக்கின்றார். இந்த நிதி ஒதுக்கீட்டில் குறிப்பாக தமிழ்ப் பிரதேசங்கள் திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன.

இந்த நாட்டில் ஆட்சியமைக்கும் ஒவ்வொரு அரசாங்கமும் தங்களுக்குச் சாதகமாக விடயங்களைப் பயன்படுத்துவதற்கான முன்னெடுப்புகளையே மேற்கொண்டு வருகின்றன.

இதனை அரசாங்கம் மாற்ற வேண்டும். கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கென்றும் மாகாணசபைகளுக்கென்றும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பாதிக்கப்படும் தமிழ் மக்கள்

ஆனால், இம்முறை அவ்வாறு இல்லை. இது மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களிலே எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் என்று சொல்லப்படுகின்றது.

அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டில் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்ட தமிழ்ப் பிரதேசங்கள் | Neglected Tamil Villages In Ampara

இந்த அபிவிருத்தி ஒதுக்கீடுகளில் தமிழ்ப் பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ள விடயத்தை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தமிழ் மக்கள் தொடர்ச்சியாக யுத்த காலத்திலும் சரி, இப்போதும் சரி என்றும் பாதிக்கப்படும் இனமாகவே இருந்து கொண்டிருக்கின்றது” என தெரிவித்துள்ளார்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?