விடுதலைப் புலிகளின் தங்க ஆபரண புதையல் அகழ்வு பணிகள் ஆரம்பம்.
நூறுவருடம் கடந்தாலும் இத்தேடுதல் தொடரும் என ஒரு அதிகாரி தெரிவித்தாராம்
TamilsKilinochchi
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********
விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் தங்க ஆபரண புதையல் தொடர்பில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸாரால் கடந்த 16ஆம் திகதியன்று குறித்த அகழ்வு பணிக்கான அனுமதி நீதிமன்றில் கோரப்பட்ட நிலையில், மன்றின் அனுமதியுடன் இன்று(19.02.2024) அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்டபட்ட விசுவமடு - குமாரசாமிபுரம் பகுதியில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான காணி ஒன்றிலேயே விடுதலைப் புலிகள் அமைப்பினால் யுத்த காலப்பகுதியில் தங்க ஆபரணங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்த நிலையில் இன்று பகல் 2.30 மணியளவில் அகழ்வு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், நீதவான், கிராம சேவையாளர் உள்ளிட்டோர் முன்னிலையில் அகழ்வு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
கருத்துகள்