முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 118 தேசியரீதியான செயல்பாடுகளில் பிரித்தானிய தமிழர்களின் செயல்பாடு மிகவும் பாராட்டத்தக்கது அந்த மாவீரர்களின் துணை எப்பொழுது அவர்களிற்கே உருத்தானது?

 

தமிழீழத் தாயகத்தின் விடுதலைக்கான மிதியுந்துப் போராட்டம்: பிரித்தானியாவில் ஆரம்பம்

தமிழீழத் தாயகத்தின் விடுதலைக்கான மிதியுந்துப் போராட்டம்: பிரித்தானியாவில் ஆரம்பம் | Struggle For Liberation Tamil Eelam Britain

Sri Lankan TamilsEngland
 8 hours ago
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழி நின்று தணியாத இலட்சிய தாகத்துடன் தமிழீழத் தாயகத்தின் விடுதலைக்கான மிதியுந்துப் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது, பிரித்தானியாவில் இன்று(15) ஆரம்பமானது. ஜெனிவாவில் எதிர்வரும் மாதம் 4 ஆம் திகதி ஜெனிவாவில் நடை பெற இருக்கும் ஐ.நாவின் கூட்டத்தொடரில் இணையும் அனைத்துலக நாடுகளின் கவனயீர்ப்பையும் அவர்களின் ஆதரவு நிலைப்பாட்டையும் பெறும் நோக்கில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன்போது, இந்த மிதியுந்துப் போராட்டத்தில் இன்றிலிருந்து தொடர்ந்து 16 நாட்கள் ஐரோப்பியநாடுகளூடாக பயணிக்க விடுதலை உணர்வாளர்கள் உறுதி கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழரசுக் கட்சிக்காக களமிறங்கப்போகும் சுமந்திரன்

தமிழரசுக் கட்சிக்காக களமிறங்கப்போகும் சுமந்திரன்


தமிழீழத்தின் எழுச்சிக் கொடிகள்

அதேவேளை, இப்போராட்டமானது, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், பணியாளர்களும் உணர்வாளர்களும் இணைந்து கையிலேந்திய தமிழீழத்தின் எழுச்சிக் கொடிகள் காற்றில் கம்பீரமாக அசைந்த வண்ணம்,கொண்ட கொள்கையின் இலட்சிய உறுதியை பிரித்தானிய தேசத்தில் காட்டி நிற்கின்றது.

தமிழின அழிப்பின் ஆதாரங்கள்

இன்றைய தினம் ஆரம்பமாகிய போராட்டப் பயணமானது பிரபல்யம் மிக்க வழிகள் ஊடாக பயணிக்கும் நேரத்தில் சிங்கள தேசத்தின் தமிழின அழிப்பின் ஆதாரங்களையும் தமிழ் மக்களின் அரசியல் விருப்புக்களையும் பிரசுரங்கள் மூலமும்,பதாதைகள் மூலமும் தெரியப்படுத்தியவாறு பி.ப 4:00 மணிக்கு பிரித்தானிய பிரதமரின் வதிவிடத்தை அடையவுள்ளது.

தமிழீழத் தாயகத்தின் விடுதலைக்கான மிதியுந்துப் போராட்டம்: பிரித்தானியாவில் ஆரம்பம் | Struggle For Liberation Tamil Eelam Britain

அத்தோடு, உறுதியேற்போடு தொடரும் தொடர் மிதியுந்து போராட்டப் பயணமானது நெதர்லாந்து உள்ளிட்ட முக்கிய ஐரோப்பிய நாடுகள் ஊடாகச் சென்று ஜெனிவாப் பேரணியில் இணையவிருப்பதாக கூறப்படுகிறது

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?