f 123 இலங்கைகையை எங்களால்கட்டுப்படுத்த முடியாது முன்னர் இந்தியத்தூதுவர் இப்பொழுது நடப்பது என்ன ?எந்த அரசில் வாதியை கதிரை ஏற்ற இந்திய ஆசைப்படுகின்றது பொறுத்து இருந்து பார்ப்போம்,
யாழில் எம்.பிக்கள் புத்திஜீவிகளுடன் இரவோடு இரவாக இந்தியா நடத்திய அவசர சந்திப்பு
![யாழில் எம்.பிக்கள் புத்திஜீவிகளுடன் இரவோடு இரவாக இந்தியா நடத்திய அவசர சந்திப்பு | Special Meeting Nort Politicians Indian Ambassador யாழில் எம்.பிக்கள் புத்திஜீவிகளுடன் இரவோடு இரவாக இந்தியா நடத்திய அவசர சந்திப்பு | Special Meeting Nort Politicians Indian Ambassador](https://cdn.ibcstack.com/article/223e3651-d77e-49bc-a8ca-c84c85212192/24-65cfd48aeb2f3.webp)
வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் புதிய இந்தியத் தூதுவர் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பானது யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் அங்கஜன் இராமநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், எம்.ஏ.சுமந்திரன், சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சி.வி.கே.சிவஞானம், சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட அரசியல் தரப்பினரும், சிவில் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
யாழ்ப்பாண விஜயம்
இதேவேளை, இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா, நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது போது யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்டுள்ளார்.சந்தோஷ் ஜாவின் யாழ்ப்பாண விஜயத்தின் போது, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் துணை தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெய பாஸ்கரன் உள்ளிட்ட இந்தியத் துணைத் தூதரகத்தின் குழுவினரும் உடன் இருந்தனர்.
இந்த நிகழ்வில் கலந்துக்கொண்ட அரசியல் பிரமுகர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
விக்னேஸ்வரன்
பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்கு இந்திய அரசாங்கமானது 500ஏக்கர் நிலத்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக வெளியாகிய செய்தி உண்மைக்கு புறம்பானது என இலங்கைக்கான இந்திய தூதுவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வடக்கின் அபிவிருத்தி மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு இருநாட்டு கடற்றொழிலாளர்கள் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக சுட்டிக்காட்டியிருந்தார்.
சுமந்திரன்
இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பை வலுவாக எதிர்ப்பதான கருத்தை இலங்கைக்கான இந்திய தூதுவரிடம் பகிரங்கமாக அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம். எ சுமந்திரன், தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் இந்தியாவுடனான விசேட உறவில் இணக்கப்பாடொன்றை எட்டுவதற்கு தாம் முன்வந்துள்ளதாக சுமந்திரன் மேலும் சுட்டிக்காட்டினார்.
ஆகவே, இந்தியாவின் புதிய தூதுவருடன் மேற்கொள்ளப்பட்ட சந்திப்பானது ஆரோக்கியமாக அமைந்தது எனவும் கூறினார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
இலங்கையை பூகோள அரசியல் ரீதியில் பார்க்காமல் இந்தியாவை போன்று தமிழ் மக்கள் மீதும் கரிசனையுடன் சர்வதேசம் செயற்படவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இதன்படி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிடின் இலங்கை அரசியலானது பாரதூரமான விளைவுகளை சந்திக்கக்கூடும்.
மேலும், சர்வதேச சமூகமானது பூகோள அரசியல் என்ற போர்வையில் இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளை பேசாவிட்டாலும் கூட கிடைக்கும் சந்தர்ப்பங்களின் எங்களது கோரிக்கைகளை பதிவு செய்யவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. என்றார்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்