சாந்தனின் இழப்புக்கு தமிழ் அரசியல்வாதிகளே காரணம்! சமூக செயற்பாட்டாளர் சீற்றம்
JaffnaRajiv GandhiSri Lanka PoliticianSri LankaIndia
நான் தொடர்ந்தும் தமிழ் அரசியல்வாதிகளை குற்றம் சாட்டுகிறேன். இதன் பின்னணியில் அவர்களது குற்றம் மாத்திரமே காரணமாக உள்ளது“ என தெரிவித்துள்ளார்.Rajkumar Rajeevkanth
இந்தத் தோல்வியை அனைவரும் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்.!
சாந்தன் அவர்களின் விடுதலை தொடர்பாக கடந்த இரண்டு வருடத்துக்கும் மேலாக அவரது தம்பி மதிசுதா போராடிக்கொண்டிருந்தார்.
பல முறை நான் அவருடன் கதைத்திருக்கிறேன், பல முயற்சிகள் போராட்டங்கள் பற்றியெல்லாம் பேசியும் ஏதோ ஒரு நம்பிக்கையில் அவர் காத்திருந்தார். என்னாலும் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை.
ஆனால் தொடர்ந்து இந்தப் பிரச்சினையை பேசிக்கொண்டிருந்தோம்.
The Hindu மற்றும் அல்ஜசீரா ஊடங்களில், அம்மாவின் வேதனை தொடர்பான செய்திகளை வர வைக்க முடிந்தது.
ஆனால் என்றோ இங்கு வந்திருக்க வேண்டியவர் எம் மக்களாலும் மக்கள் பிரதிநிதிகளாலும் முழுமையாக கைவிடப்பட்டார்.
அயல் நாடு இங்கு வந்து இசை நிகழ்ச்சியை நடத்துகிறது, ஜல்லிக்கட்டு நடத்துகிறது, வட கிழக்கில் ஏராளமாக முதலிடுகிறது, எம் பிரதிநிதிகள் மாமா மச்சான் உறவில் இருக்கின்றார்கள்.
இன்று வருந்தும் இத்தனை உள்ளங்களும் இதே ஆதரவை வெளிப்படையாக முன்னமே செய்திருக்க வேண்டும்.
வடக்கில் துணைத்தூதரகம் வைக்கும் அளவிற்கு அவர்களுக்கு தேவை இருக்கும் போது எமக்கு இருக்கும் அரசியல் கோரிக்கையை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்க வேண்டும்.
இன்று அழுது என்ன பயன்?
கருத்துகள்