யாழ். வடமராட்சி வீதியில் பயணிக்க அஞ்சும் சாரதிகள்! வெளியான காரணம்
![யாழ். வடமராட்சி வீதியில் பயணிக்க அஞ்சும் சாரதிகள்! வெளியான காரணம் | Drivers Afraid To Travel On The Vadamarachchi Road யாழ். வடமராட்சி வீதியில் பயணிக்க அஞ்சும் சாரதிகள்! வெளியான காரணம் | Drivers Afraid To Travel On The Vadamarachchi Road](https://cdn.ibcstack.com/article/dc06ae04-0c71-4684-820a-31f1cb26c42c/24-65e0c77ac2287.webp)
![Shankar](https://cdn.ibcstack.com/user/avatar/ym.webp)
Shankar
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தெற்கு பருத்தித்துறை பிரதான வீதியில் மாடுகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால் சாரதிகள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
குறித்த பக்குதியில் வசிக்கும் ஒரு சிலரின் பொறுப்பற்ற செயலால் பகல், இரவு வேளைகளில் அதிகளவான மாடுகள் வீதியில் படுத்து உறங்குவதால் விபத்து சம்பவங்கள் இடம்பெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
மருதங்கேணி வைத்தியசாலையில் இருந்து சரியான நேரத்தில் நோயாளிகளை கொண்டு செல்வதற்கு தடையாக மருதங்கேணி தெற்கு பிரதான வீதி காணப்படுவதால் மாடுகளை அகற்றுமாறு கோரி மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை வைத்தியர் நரேந்திரன் அவர்களால் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டது.
மருதங்கேணி தெற்கு கிராம அலுவலருக்கு விடயம் தொடர்பாக அறிவித்தும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இரவு நேரங்களில் நடுவீதியில் படுத்துறங்கும் கட்டாக்காலி மாடுகளை அப்புறப்படுத்தி தாங்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வதற்கு வழிவகை செய்யுமாறும் மக்கள் கோரிக்கை விடுத்தமையும் குறிப்பிடத்தக்கது
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்