தமிழர் பகுதியொன்றில் பெரும் துயரம்: விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பெண்!
Sri Lanka PoliceVavuniyaTrain CrashAccident
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********
வவுனியாவில் உள்ள ரயில் கடவையை கடக்க முற்பட்ட பெண்ணொருவர் மீது ரயில் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் புளியங்குளம், புதூர் பகுதியில் இன்றையதினம் (29-02-2024) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற ரயில் புதூர் பகுதியில் உள்ள ரயில் கடவையைக் கடக்க முற்பட்ட போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து, உயிரிழந்த பெண்ணின் சடலம் மாங்குளம் ரயில் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு ஒப்படைக்கப்பட்டதுடன், அங்கிருந்து மாங்குளம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
குறித்த சம்பவத்தில் 45 தொடக்கம் 55 வயது மதிக்கத்தக்க பெண்ணே மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் சடலம் கடுமையாக சேதமடைந்துள்ளதால் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்