முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 386 சிறிலங்கா கடற்படை வீரரின் மனைவிக்கு,என்ன நடந்தது?

 

சிறிலங்கா கடற்படை வீரரின் மனைவி, மகன் கிணற்றிலிருந்து சடலங்களாக மீட்பு

சிறிலங்கா கடற்படை வீரரின் மனைவி, மகன் கிணற்றிலிருந்து சடலங்களாக மீட்பு | Sri Lanka Navy Veteran Wife Son Well Dead Bodies
 By Sumithiran 1 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

வாரியபொல வல்பொல பிரதேசத்தில் வசிக்கும் 6 வயது சிறுவனும் அவனது தாயும் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக வாரியபொல காவல்துறையினர் தெரிவித்தனர்.

குருநாகல் பாதுகாப்பு சேவை கல்லூரியில் முதலாம் தரத்தில் கல்வி பயின்ற ஆர்.எம். கோவிடா சரமித் (06) மற்றும் இ.எம். லக்மாலி வீரசிங்க (37). இருவருமே மரணமடைந்தவர்களாவர்.

வயல்வெளியில் அமைந்துள்ள கிணற்றில் குளிப்பதற்கு

இவர்கள் இருவரும் நேற்று (22) வீட்டிற்கு அருகிலுள்ள வயல்வெளியில் அமைந்துள்ள கிணற்றில் குளிப்பதற்குச் சென்றதாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.


கிணற்றில் விழுந்த சிறுவனை காப்பாற்ற தாய் கிணற்றில் குதித்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

வெளிநாடு ஒன்றிலிருந்து நாடுதிரும்பிய இலங்கை பெண் விமானத்திலேயே பலியான துயரம்

வெளிநாடு ஒன்றிலிருந்து நாடுதிரும்பிய இலங்கை பெண் விமானத்திலேயே பலியான துயரம்

சிறுவனின் தந்தை கடற்படையில் பணிபுரிவதாகவும் அவர் தூர மாகாணத்தில் இருப்பதால் தாயும் குழந்தையும் மட்டுமே வீட்டில் இருப்பதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

கிணற்றின் அருகே சோதனையிட்டபோது

இதனால், குளிக்கச் சென்ற இருவரையும் தேட யாரும் இல்லை என, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர் மாலை 6:00 மணிக்கு மேல் இருவரும் வீட்டில் இல்லாததை அக்கம் பக்கத்தினர் அறிந்தனர். பின்னர், இந்த கிணற்றின் அருகே சோதனையிட்டபோது, ​​சிறுவன் மற்றும் தாயின் காலணிகள் மற்றும் உடைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

சிறிலங்கா கடற்படை வீரரின் மனைவி, மகன் கிணற்றிலிருந்து சடலங்களாக மீட்பு | Sri Lanka Navy Veteran Wife Son Well Dead Bodies

பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அப்பகுதி மக்கள் கிணற்றில் சடலங்களை கண்டெடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியபொல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?