மன்னாரில் 17 வயது சிறுமி வன்புணர்வு : மூவர் கைது
மன்னார் காவல்துறை பிரிவில் உள்ள கிராமம் ஒன்றில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் மூன்று நபர்களால் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
இது தொடர்பில் மன்னார் காவல் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மூவர் மன்னார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விளக்கமறியலில் வைக்க உத்தரவு
மன்னார் பெரிய கமம் பகுதியைச் சேர்ந்த 23,18,17 வயதுடைய இளைஞர்கள் மூவர் மேற்படி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூன்று நபர்களும் சிறுமியின் நிர்வாண புகைப்படத்தை வைத்திருந்ததோடு அப் புகைப்படத்தை நண்பர்களிடமும் பரிமாறிக் கொண்டுள்ளனர்.
அப்புகைப் படங்களை வைத்து சிறுமியை மிரட்டி வன்புணர்வில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அதே நேரம் சம்பவத்தின் பிரதான குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் வாகன திருத்தகம் ஒன்றில் பணிபுரியும் 23 வயதுடைய நபர் சிறுமியை வன்புணர்வு செய்ததுடன் அவரிடம் இருந்து 2 ஆயிரம் ரூபாய் பணத்தையும் வலுக்ககட்டாயமாக அபகரித்துச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரின் தாயார் மன்னார் காவல் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மன்னார் காவல்துறையினர் சந்தேக நபர்கள் மூவரையும் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து, மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில் சந்தேக நபர்கள் மூவரையும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்