முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 326 இலங்கையில் தொடரும் பெண்கள் ரீதியான வன்முறைகள்?

 

மன்னாரில் 17 வயது சிறுமி வன்புணர்வு : மூவர் கைது

மன்னாரில் 17 வயது சிறுமி வன்புணர்வு : மூவர் கைது | 17 Year Old Girl Molested In Mannar Three Arrested
 By Vanan 2 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

மன்னார் காவல்துறை பிரிவில் உள்ள கிராமம் ஒன்றில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் மூன்று நபர்களால் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

இது தொடர்பில் மன்னார் காவல் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மூவர் மன்னார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விளக்கமறியலில் வைக்க உத்தரவு

மன்னார் பெரிய கமம் பகுதியைச் சேர்ந்த 23,18,17 வயதுடைய இளைஞர்கள் மூவர் மேற்படி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையின் இறுதி போரை நினைவூட்டும் காசாவின் சம்பவங்கள்

இலங்கையின் இறுதி போரை நினைவூட்டும் காசாவின் சம்பவங்கள்


மூன்று நபர்களும் சிறுமியின் நிர்வாண புகைப்படத்தை வைத்திருந்ததோடு அப் புகைப்படத்தை நண்பர்களிடமும் பரிமாறிக் கொண்டுள்ளனர்.

அப்புகைப் படங்களை வைத்து சிறுமியை மிரட்டி வன்புணர்வில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அதே நேரம் சம்பவத்தின் பிரதான குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் வாகன திருத்தகம் ஒன்றில் பணிபுரியும் 23 வயதுடைய நபர் சிறுமியை வன்புணர்வு செய்ததுடன் அவரிடம் இருந்து 2 ஆயிரம் ரூபாய் பணத்தையும் வலுக்ககட்டாயமாக அபகரித்துச் சென்றுள்ளார்.

இஸ்ரேல் ஹமாஸ் மோதல்கள்: ரஷ்யாவின் குறிக்கோளை முன்வைத்த புடின்

இஸ்ரேல் ஹமாஸ் மோதல்கள்: ரஷ்யாவின் குறிக்கோளை முன்வைத்த புடின்

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரின் தாயார் மன்னார் காவல் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மன்னார் காவல்துறையினர் சந்தேக நபர்கள் மூவரையும் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து, மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில் சந்தேக நபர்கள் மூவரையும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?