ஜேர்மனி காசா மக்களுக்கு அறிவித்துள்ள மனிதாபிமான நிதியுதவி! (வீடியோ இணைப்பு)
By Shadhu Shanker 8 நிமிடங்கள் முன்
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********
காசா மக்களுக்கு ஜேர்மனி 50 மில்லியன் யூரோக்களை நிதியுதவியாக வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்ந்து 15 நாட்களாக நடந்து வரும் இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு நாடுகளும் மனிதாபிமான நிதியுதவியை வழங்க முன்வந்துள்ளது.
அந்தவகையில் காசா மக்களுக்கு ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சரான Annalena Baerbock, ஜேர்மனி 50 மில்லியன் யூரோக்கள் நிதியுதவி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அறிக்கையில், ஜேர்மனி மருத்துவக் குழுக்களையும் காசா பகுதிக்கு அனுப்பத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் தனது முதல் கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வரும் ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சரான Annalena Baerbock தற்போது ஜோர்டான் சென்றுள்ளார்.
ஜோர்டானில் வைத்து ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பங்கேற்றபோது, 'எங்கள் செய்தி தெளிவானது, நாங்கள் அப்பாவி பலஸ்தீனிய தாய்மார்கள், தந்தைகள் மற்றும் குழந்தைகளை கைவிட மாட்டோம்'' என தெரிவித்துள்ளார்.
கருத்துகள்