முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 349 போரில் புதிய திருப்பம்


இஸ்ரேல் - பலஸ்தீன போரில் புதிய திருப்பம் : பைடன் எடுத்த அதிரடி முடிவு(வீடியோ இணைப்பு)

இஸ்ரேல் - பலஸ்தீன போரில் புதிய திருப்பம் : பைடன் எடுத்த அதிரடி முடிவு | Us President Joe Biden Visit Israel On Tomorrow
 By Kathirpriya 30 நிமிடங்கள் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

பத்து நாட்களைக் கடந்தும் இஸ்ரேல் பலஸ்தீனம் இடையேயான போர் தொடர்ந்து வரும் நிலையில் புதிய திருப்பமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு செல்லவுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி வெளியிட்டுள்ளது. 

நாளுக்கு நாள் போரின் உக்கிரம் அதிகரித்து வரும் நிலையில் இரு தரப்பிலும் பலி எண்ணிக்கை சுமார் 4,000 ஐ கடந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதில் காசா மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்துவதற்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவுகளை வழங்கி வருகிறது.

பாலஸ்தீன மக்களுக்கு நிதியுதவியை அறிவித்த பிரித்தானிய பிரதமர்

பாலஸ்தீன மக்களுக்கு நிதியுதவியை அறிவித்த பிரித்தானிய பிரதமர்

மக்களைப் பாதுகாக்க

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை (17) இஸ்ரேல் செல்ல திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

இத்தைகைய ஒரு முக்கியமான தருணத்தில் அதிபர் இஸ்ரேலுக்கு செல்வதன் மூலம் இஸ்ரேலுடனான அமெரிக்காவின் ஒற்றுமையை பைடன் உறுதிப்படுத்துவதாக அமைகிறது என்று பிளிங்கன் கூறியிருந்தார்.

இந்த விஜயத்தின் மூலம் தமது மக்களைப் பாதுகாக்கவும் எதிர்காலத் தாக்குதல்களைத் தடுக்கவும் இஸ்ரேலுக்கு உரிமையும் கடமையும் உள்ளது என்பதை அதிபர் பைடன் மீண்டும் தெளிவுபடுத்துவார் என்றும் அவர் தெரிவித்தார்.

பலஸ்தீன நோக்கத்தை தொடர்ந்தும் ஆதரிப்பேன் : மகிந்த வலியுறுத்து

பலஸ்தீன நோக்கத்தை தொடர்ந்தும் ஆதரிப்பேன் : மகிந்த வலியுறுத்து


ஏனெனில், குறைந்தது 30 அமெரிக்கர்கள் உட்பட 1,400 க்கும் மேற்பட்டவர்களை ஹமாஸ் படுகொலை செய்துள்ளது இதனால் ஹமாஸ் மற்றும் பிற அமைப்பினரிடம் இருந்து மக்களை காக்க வேண்டிய கடமை அதிபருக்கு உண்டு என அவர் தெளிவுபடுத்தினார்.

இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி இஸ்ரேலைத் தாக்க முயற்சிக்கும் எந்தவொரு அரசாக இருந்தாலும் சரி அரசு சாராதவர்களாக இருந்தாலும் சரி, அதிபர் பைடன் இஸ்ரேல் மீதான தமது ஆதரவை தெளிவாக எடுத்துரைப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

பாலஸ்தீன மக்கள் மீதான இன அழிப்பு : யாழில் கண்டன போராட்டம்

பாலஸ்தீன மக்கள் மீதான இன அழிப்பு : யாழில் கண்டன போராட்டம்

 மேலும் ஹமாசால் பிடிக்கப்பட்ட பிணைக்கைதிகளை விடுவிக்கவும் அதிபர் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் பலதரப்பு அமைப்புகளின் மனிதாபிமான உதவிகளை காசாவில் உள்ள பொதுமக்களுக்கு வழங்கவுள்ள திட்டத்தை ஒப்புக்கொண்டுள்ளதையும் பிளிங்கன் இந்த வேளையிலே சுட்டிக்காட்டினார்.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?