முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 393 அனைத்து தமிழர்களையும் வெட்டுவேன்:

 

அனைத்து தமிழர்களையும் வெட்டுவேன்: தேரரால் மீண்டும் ஏற்பட்ட பதற்றம்!

அனைத்து தமிழர்களையும் வெட்டுவேன்: தேரரால் மீண்டும் ஏற்பட்ட பதற்றம்! | Sumanarathana Thero Said Will Kill All The Tamils
Sri Lanka PoliceSri Lankan TamilsBatticaloa
 3 மணி நேரம் முன்
Shankar

Shankar

  •  
  •  
  •  
Follow us on Google News

அனைத்து தமிழர்களையும் வெட்டுவேன், என்ன செய்கிறார்கள் என பார்ப்போம் என்று மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் இன்றைய தினம் (25-10-2023) மாலை அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மேற்கொண்ட செயற்பாடுகள் காரணமாக அப்பகுதியில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டது.


மட்டக்களப்பு - இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள சிங்கள மயானத்தில் வீடு உடைத்த கழிவுப்பொருட்கள் போடப்பட்டுள்ள நிலையில், அங்குவந்த அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அதற்கு எதிராக கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை கொண்டு பேசினார்.

இதன்போது குறித்த பகுதிக்கு வந்த பொலிஸார் அவரை சமாதானப்படுத்தி அங்கிருந்து செல்லவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

அனைத்து தமிழர்களையும் வெட்டுவேன்: தேரரால் மீண்டும் ஏற்பட்ட பதற்றம்! | Sumanarathana Thero Said Will Kill All The Tamils

குறித்த பகுதியில் இரு நாட்களுக்கு முன்பாக குறித்த கட்டிட இடிபாடுகள் கொட்டப்பட்ட நிலையில் அவற்றினை அங்கிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கையினை எடுப்பதாக மாநகரசபை ஆணையாளர் சுமனரத்ன தேரரிடம் நேற்று தெரிவித்திருந்தாகவும் இருப்பினும் அவர் இன்று அங்கு சென்று இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டதாகவும் மாநகர ஆணையாளர் தெரிவித்தார்.

குறித்த கட்டிட இடிபாடுகளை அகற்றி அப்பகுதியை தூய்மைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதகாவும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும், இரு முச்சக்கர வண்டிகளில் வந்த அம்பிட்டிய சுமனரத்ன தேரரும் அவருடைய சகாக்களும் அங்கிருந்தவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் கருத்துகளை தெரிவித்ததுடன் இனமுரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையிலும் கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

இதேவேளை அங்கு அம்பிட்டியே சுமனரத்ன தேரர் கத்தி கூச்சலிடுகையில்,

“பொலிஸார் இந்த வீதியை மூடினார்கள், பிரச்சினை ஏற்படுத்தினார்கள், இறுதியில் எமக்கு எதிராகவே வழக்குத் தாக்கல் செய்தனர். இவர்களின் இந்த செயற்பாடு சரியானதா.

இவ்வாறு செய்ய வேண்டாம். நாம் உதவியற்றவர்கள். இனம் என்ற ரீதியில், இங்கு இடம்பெறும் குற்றங்களைத் தடுக்க வேண்டும்.

இலங்கையில் இனவாதம் இல்லை, மதவாதமும் இல்லை. இந்த நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் நல்லிணக்கத்துடன் மிகவும் அமைதியாக வாழ்கின்றனர்.

சாணக்கியன் மற்றும் இங்குள்ள அதிகாரிகள் மேற்கொள்ளும் மோசமான நடவடிக்கைகளால் மீண்டும் ஒரு யுத்தம் நாட்டில் ஏற்படும். அவ்வாறு யுத்தம் ஏற்படுவதை தடுக்க முடியாது” என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?