முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 322 விடுதலைப் புலிகளின் பேரில் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்க இந்திய திட்டம் என்ற உன்மையை அறிந்து இலங்கை?

 

விடுதலைப் புலிகள் அமைப்பின் சில பகுதிகள் ஐரோப்பிய நாடுகளில் செயற்படுவதாக கூறும் சரத் வீரசேகர

விடுதலைப் புலிகள் அமைப்பின் சில பகுதிகள் ஐரோப்பிய நாடுகளில் செயற்படுவதாக கூறும் சரத் வீரசேகர | Info Received From India Sarath Weerasekhara
 By Mayuri 5 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

விடுதலைப் புலிகள் அமைப்பின் வாலை மட்டுமே அழித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தமிழீழத்தை 13இன் ஊடாக பெற்றுக் கொள்வதே புலம்பெயர் அமைப்புக்களின் இலக்காகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவில் இன்று (12.10.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

முயற்சி செய்தும் அனுமதி கிடைப்பதில்லை: முரளிதரன் பகிரங்க குற்றச்சாட்டு

முயற்சி செய்தும் அனுமதி கிடைப்பதில்லை: முரளிதரன் பகிரங்க குற்றச்சாட்டு


தமிழீழத்தை பெறும் இலக்கு

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை நாம் பெரும்பாலும் அழித்துள்ளோம். ஆனால், நாம் விடுதலைப் புலிகள் அமைப்பின் வாலை மட்டும்தான் அழித்துள்ளோம்.

அதன் தலை உள்ளிட்ட ஏனைய பகுதிகள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இன்னமும் செயற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. தோட்டாக்களினால் பெற்றுக் கொள்ள முடியாதுபோன தமிழீழத்தை, 13இன் ஊடாக பெற்றுக் கொள்வதே புலம்பெயர் அமைப்புக்களின் இலக்காகும்.

இதனால்தான், நாம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக ஜெனிவாவில் இவர்கள் குற்றஞ்சாட்டி வருகிறார்கள். அத்தோடு, வடக்கு கிழக்கிலுள்ள பௌத்த புராதன சின்னங்களை அழிக்கும் செயற்பாடுகளிலும் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

டைட்டன் நீர்மூழ்கி விபத்து: 114 நாள் தேடுதலுக்கு பின் வெளியான பரபரப்புத் தகவல்!

டைட்டன் நீர்மூழ்கி விபத்து: 114 நாள் தேடுதலுக்கு பின் வெளியான பரபரப்புத் தகவல்!

விடுதலைப் புலிகள் அமைப்பின் சில பகுதிகள் ஐரோப்பிய நாடுகளில் செயற்படுவதாக கூறும் சரத் வீரசேகர | Info Received From India Sarath Weerasekhara

அச்சுறுத்தலான சூழல்

யுத்தத்திற்கு பின்னர் 12422 விடுதலைப் புலி உறுப்பினர்களை நாம் புனர்வாழ்வளித்து, சமூக மயமாக்கியுள்ளோம். பயங்கரவாதத்தை நாம் கட்டமைப்பு ரீதியாக இல்லாதொழித்தாலும், அவர்களின் ஈழக் கனவு இன்னமும் இருப்பதனால், எமக்கு இன்னமும் அச்சுறுத்தலான சூழல் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது.

இந்த நிலையில்தான் மீண்டும், விடுதலைப் புலிகள் அமைப்பு தலைத்தூக்கி வருவதாக இந்தியாவிலிருந்து எமக்கு புலனாய்வுத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இதுதொடர்பாக இராணுவப் புலனாய்வுத் துறையினர், ஆராய்ந்து வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?