கட்டுநாயக்காவில் இரவு பயங்கர விபத்து சம்பவம்: பரிதாபமாக உயிரிழந்த இருவர்!
By Kirushanthi 2 மணி நேரம் முன்
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கட்டுநாயக்க பகுதியில் நேற்று (22.10.2023) இரவு வேளையில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், அப்பகுதியில் கூடிய பொதுமக்களினால் பதற்ற நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பைச்சேர்ந்த தனிநபர் ஒருவருக்குச் சொந்தமான குறித்த பேருந்து கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போதே கட்டுநாயக்க பகுதியில் முச்சக்கர வண்டியுடன் மோதப்பெற்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன் போது முச்சக்கர வண்டியில் பயணம் செய்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள்