முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 356 மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல் தான்..! ஐ.நா தூதர் குற்றச்சாட்டுகாசா

 

காசா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல் தான்..! ஐ.நா தூதர் குற்றச்சாட்டு

காசா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல் தான்..! ஐ.நா தூதர் குற்றச்சாட்டு | Israel Hamas War Condemns Gaza Hospital Attack

 By pavan 1 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

இஸ்ரேல் - பலஸ்தீனம் இடையே ஆண்டாண்டு காலமாக மோதல் நீடித்து வரும் சூழலில், பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கடந்த 7 ஆம் திகதி பெரிய அளவில் போர் வெடித்தது.

இரு தரப்புக்கும் இடையில் ஏற்கனவே 5 முறை போர் ஏற்பட்டிருந்தாலும், அவற்றையெல்லாம் விட தற்போதைய போர் மிகவும் கொடூரமானதாக மாறி வருகிறது.

போரை உடனடியாக நிறுத்த இரு தரப்பையும் சர்வதேச சமூகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் நாளுக்கு நாள் போர் உக்கிரமடைந்து வருகிறது.

காசா மருத்துவமனை தாக்குதல்: பைடனின் அதிரடி நடவடிக்கைகள்

காசா மருத்துவமனை தாக்குதல்: பைடனின் அதிரடி நடவடிக்கைகள்


மருத்துவமனை மீது குண்டு வீச்சு

இந்நிலையில், காசாவில் உள்ள மீது ஆஸ்பத்திரி மீது குண்டு வீசப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த உலகையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.


காசா சிட்டியில் உள்ள அல்-அக்லி மருத்துவமனை மீது குண்டு வீசப்பட்டதில் அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் மற்றும் தாக்குதலுக்கு பயந்து தஞ்சம் அடைந்திருந்த பொதுமக்கள் என 500 பேர் கொன்று குவிக்கப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

மருத்துவமனை மீது இஸ்ரேல் போர் விமானம் குண்டு வீசியதாக காசா தரப்பில் கூறப்படும் நிலையில் இஸ்ரேல் அரசு அதை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

மேலும், காசாவில் இருக்கும் பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பு ஒன்று இஸ்ரேலை நோக்கி வீசிய ராக்கெட் குண்டு தவறுதலாக மருத்துவமனையில் விழுந்து வெடித்ததாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

காசா மக்களுக்காக முன்வரும் ஸ்கொட்லாந்து

காசா மக்களுக்காக முன்வரும் ஸ்கொட்லாந்து


இஸ்ரேலிய ஆயுதங்கள் அல்ல 

மேலும், மருத்துவமனை மீதான தாக்குதல் குறித்து ஹமாஸ் போராளிகள் இருவர் பேசிய காணொளி பதிவு ஒன்றை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது.

காசா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல் தான்..! ஐ.நா தூதர் குற்றச்சாட்டு | Israel Hamas War Condemns Gaza Hospital Attack

அதில் பேசும் ஹமாஸ் போராளிகள் மருத்துவமனை மீதான தாக்குதல் பயங்கரவாத அமைப்பின் தவறுதலான குண்டு வீச்சு என நம்புவதாகவும், கைப்பற்றப்பட்ட வெடிகுண்டின் சிதைவுகள் இஸ்ரேலிய ஆயுதங்கள் அல்ல எனவும் கூறுகின்றனர்.

இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு வெளியிட்டுள்ள அறிக்கையில், “காசா மருத்துவமனையை தாக்கியவர்கள் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் அல்ல.

காசாவில் இருக்கும் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதிகள் தான் என்பதை உலகம் அறியும். எங்கள் குழந்தைகளை கொடூரமாக கொன்றவர்கள், அவர்களின் குழந்தைகளையும் கொலை செய்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

போரின் போக்கை மாற்றப்போகும் அதிரடி தாக்குதல்!

போரின் போக்கை மாற்றப்போகும் அதிரடி தாக்குதல்!


குற்றச்சாட்டை மறுத்த பலஸ்தீன அமைப்பு

ஆனால் இஸ்ரேலின் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள சம்பந்தப்பட்ட பலஸ்தீன அமைப்பு, “இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட காணொளி பொய்யானது.

காசா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல் தான்..! ஐ.நா தூதர் குற்றச்சாட்டு | Israel Hamas War Condemns Gaza Hospital Attack

இஸ்ரேல் கொடூரமான படுகொலைக்கான பொறுப்பிலிருந்து தப்பிக்க கடுமையாக முயற்சிக்கிறது” என சாடியது.

காசா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்தான் என ஐ.நாவுக்கான பாலஸ்தீன தூதர் ரியாத் மன்சூர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?