முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 321 ஆனந்தபுரச் சமரில் பயன்படுத்திய ஆபத்தான ஆயுதங்கள் காஸா களமுனைகளில்


ஆனந்தபுரச் சமரில் பயன்படுத்திய ஆபத்தான ஆயுதங்கள் காஸா களமுனைகளில்



(Video)

 By DHARU 3 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

இஸ்ரேல் - ஹமாஸ் போர் வலுப்பெற்றுவரும் நிலையில் ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான எச்சரிக்கையும் பகிரங்க கருத்தாடல்களும் அதிகரித்தவண்ணமுள்ளன.

இந்நிலையில் இஸ்ரேல் மீதான தாக்குதல் குறித்து ஈரானிய ஆன்மீகத்தலைவர் ''திட்டமிட்டவர் கைகளில் முத்தமிடுகின்றோம்'' என ஒரு கருத்தை வெளிப்படுத்திய விடயம் மேலும் இஸ்ரேல் போரில் ஈரானின் எதிர்ப்பை வலுப்படுத்தும் விடயமாக அமைந்திருந்தது.

மேலும் இந்த போரில் காசா களமுனைகளில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் பயன்படுத்தப்பட்டவை போன்றது என்ற கருத்துக்களும் தமிழ் ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகின்றன. 

இவ்வாறு ஈரானின் உற்றுநோக்கல்களும், இஸ்ரேல் போரில் ஹமாஸிற்கான ஆதரவு குறித்தும் எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரித்தானிய அரசியல் விமர்சகர் அருள் தெரிவித்த கருத்துக்கள், இஸ்ரேல் - பாலஸ்தீனத்தின் போரின் பின்னணிகளை விரிவாக வெளிப்படுத்தியுள்ளது.

குறிப்பாக இந்த போரில் அமெரிக்கா எவ்வாறான கண்ணோட்டத்தை கொண்டுள்ளது என்பதனையும், மத்தியகிழக்கில் தனது ஆதிக்கத்தின் நிலைப்பாடுகளை எவ்வாறு இஸ்ரேலுடன் கைகோர்த்து நகர்த்துகின்றது என்பது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசியல் விமர்சகர் அருள் தெரிவிக்கையில்'' அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து பலஸ்தீனத்துக்கு எதிராக வெளிப்படுத்திய அச்சுறுத்தல், கருத்துக்கள் அனைத்தையும் இந்த தாக்குதல் முறையடித்துள்ளது. உலகெங்கும் வாழும் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கான சமர்ப்பணமாகவும் காணப்படுகிறது.'' என்ற கருத்தினை முன்வைத்திருந்தார்.

இவ்வாறு இஸ்ரேல் - ஹமாஸ் போர்நிலை குறித்தும் அதன் தாக்கங்களுக்கு ஈரான், அமெரிக்க வழங்கும் ஆதரவுகள் குறித்தும் விரிவாக ஆராய்கிறது இன்றைய ஊடறுப்பு..


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?