முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 398 இருளில் தொடங்கிய காசா தரை போர்: இஸ்ரேலிய ராணுவம் காசாவுக்குள்! |


மும்முனை தாக்குதலால் நிர்மூலமாகும் காசா : அதிகரிக்கும் மரண ஓலம்

மும்முனை தாக்குதலால் நிர்மூலமாகும் காசா : அதிகரிக்கும் மரண ஓலம் | Gaza Is Wiped Out By The Attack
 By Sumithiran 5 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

"கடந்த சில மணிநேரங்களில், காசா பகுதி மீது வான், கடல் மற்றும் தரையில் இருந்து தாக்குதல்கள் நடைபெறுவதாக இஸ்ரேலிய படைத்துறை செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி வெள்ளிக்கிழமை மாலை தெரிவித்தார்.

ஹமாஸ் அமைப்பின் உள்கட்டமைப்பைத் தகர்க்க இஸ்ரேலிய தரைப்படைகள் காசாவிற்குள் தங்கள் தாக்குதல்களை விரிவுபடுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

300 ற்கும் மேற்பட்ட இஸ்ரேலிய படையினர் பலி

கடந்த 7 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதல்களில் இருந்து இதுவரை 310 இஸ்ரேலிய வீரர்கள் இறந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக ககாரி கூறினார்   


தீவிரமடையும் இஸ்ரேல் - பலஸ்தீன் போர் : இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

தீவிரமடையும் இஸ்ரேல் - பலஸ்தீன் போர் : இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

 இதேவேளை காசா மீது இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அந்த நகரத்திற்கான இணைய வழி தொடர்புகள் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளன.இதனால் அங்கு என்ன நடைபெறுகிறது என்பது வெளி உலகத்திற்கு தெரிய வாய்ப்பில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்படுமா..! கல்வி அமைச்சருக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்படுமா..! கல்வி அமைச்சருக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

இதனிடையே பாலஸ்தீன செஞ்சிலுவைச் சங்கம், காசா பகுதியில் உள்ள அதன் நடவடிக்கை குழுவுடனான தொடர்பை முற்றிலும் இழந்துவிட்டதாகக் தெரிவித்துள்ளது.

"எங்கள் குழுக்களின் அவசர மருத்துவ சேவைகளை தொடர்ந்து வழங்குவதில் நாங்கள் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளோம், குறிப்பாக இந்த இடையூறு மத்திய அவசரகால எண் '101' ஐ பாதிக்கிறது மற்றும் காயமடைந்தவர்களுக்கு அம்புலன்ஸ் வாகனங்கள் வருவதைத் தடுக்கிறது.

காசா பகுதியில் பணிபுரியும் தனது குழுக்களின் பாதுகாப்பு குறித்தும் கவலைப்படுவதாகவும், "அப்பாவி பொதுமக்கள், மருத்துவ வசதிகள் மற்றும் எங்கள் குழுக்களுக்கு உடனடி பாதுகாப்பு வழங்க இஸ்ரேலிய அதிகாரிகள் மீது அழுத்தம் கொடுக்க" உலகிற்கு அழைப்பு விடுப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?