முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 390 முல்லைத்தீவில் பரபரப்பு :

 

முல்லைத்தீவில் பரபரப்பு : இளம்குடும்பபெண் கொலை செய்து புதைப்பு (படங்கள்)

முல்லைத்தீவில் பரபரப்பு : இளம்குடும்பபெண் கொலை செய்து புதைப்பு (படங்கள்) | Young Woman Murdered And Buried In Mullaitivu
MullaitivuAttempted MurderSri Lanka Police Investigation
 6 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
Follow us on Google News

முல்லைத்தீவு நீராவிப்பிட்டி கிழக்கு கிராமத்தில் இளம் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் அவரது உடலம் மீட்கப்பட்டுள்ளது.இதேநேரம் குடும்ப தலைவன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீராவிப்பிட்டி கிழக்கு பகுதியில் அண்மைய சில நாட்களாக வாடகைக்கு வீடு ஒன்றை பெற்று தங்கி வந்த இளம்குடும்ப பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டு வீட்டின் பின்பாகவுள்ள மலசலகூடத்திற்கு அருகே குழி தோண்டி புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வாடகை வீடொன்றில் கடந்த மூன்று வாரமாக

புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த பெண்ணும் த.கீதா (வயது 23), முள்ளியவளை குமாரபுரத்தைச் சேர்ந்த ஆணும் (வயது 23) திருமணம் முடித்து நீராவிப்பிட்டி கிழக்கு பகுதியிலுள்ள வாடகை வீடொன்றில் கடந்த மூன்று வாரமாக வசித்து வந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.


உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த குடும்ப பெண்ணின் இளம் குடும்ப தலைவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காவல்துறையினர் விசாரணை

இந் நிலையில் குறித்த பெண் கொலை செய்யப்பட்டதற்கான காரணத்தினை முள்ளியவளை காவல் நிலைய பொறுப்பதிகாரி கே.சங்கீத் தலைமையிலான காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முல்லைத்தீவில் பரபரப்பு : இளம்குடும்பபெண் கொலை செய்து புதைப்பு (படங்கள்) | Young Woman Murdered And Buried In Mullaitivu

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தோண்டப்பட்ட குறித்த அகழ்வுப்பணியின் போது சட்டவைத்திய அதிகாரி வாசுதேவ, தடயவியல் காவல்துறையினர் விசேட அதிரடிப் படையினர், காவல்துறையினர் ஆகியோர் முன்னிலையில் குறித்த அகழ்வு பணியினை முன்னெடுத்திருந்தனர்.

தாயாரிடம் நாளாந்தம் உரையாடல்

குறித்த இளம் குடும்ப பெண் தொலைபேசியில் தனது தாயாரிடம் நாளாந்தம் உரையாடுவதாகவும் கடந்த 21.10.2023 திகதிக்கு பின்னர் மகளின் தொலைபேசி துண்டிக்கப்பட்ட நிலையில் நேற்றையதினம் 23.10.2023 மகளும் மருமகனும் வசிக்கும் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவர்கள் தங்கி இருந்த வீட்டின் பின்புறம் புதிதாக மண்ணால் நிரப்பப்பட்ட குழி ஒன்று காணப்படுவதாகவும் இதனால் சந்தேகம் அடைந்த குறித்த இளம் குடும்ப பெண்ணின் தாயாரால் முள்ளியவளை காவல் நிலையத்தில் நேற்றையதினம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் பரபரப்பு : இளம்குடும்பபெண் கொலை செய்து புதைப்பு (படங்கள்) | Young Woman Murdered And Buried In Mullaitivu

முல்லைத்தீவில் பரபரப்பு : இளம்குடும்பபெண் கொலை செய்து புதைப்பு (படங்கள்) | Young Woman Murdered And Buried In Mullaitivu

முல்லைத்தீவில் பரபரப்பு : இளம்குடும்பபெண் கொலை செய்து புதைப்பு (படங்கள்) | Young Woman Murdered And Buried In Mullaitivu

முல்லைத்தீவில் பரபரப்பு : இளம்குடும்பபெண் கொலை செய்து புதைப்பு (படங்கள்) | Young Woman Murdered And Buried In Mullaitivu

முல்லைத்தீவில் பரபரப்பு : இளம்குடும்பபெண் கொலை செய்து புதைப்பு (படங்கள்) | Young Woman Murdered And Buried In Mullaitivu


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?