முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 333 இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற செயல்: ஐ.நா விடுத்துள்ள பணிப்புரை

இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற செயல்: ஐ.நா விடுத்துள்ள பணிப்புரை

இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற செயல்: ஐ.நா விடுத்துள்ள பணிப்புரை | Gaza People Use Dirty Water Increasing Diseases
 By Kathirpriya 18 நிமிடங்கள் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

காசா வாழ் மக்கள் அசுத்தமான நீரை பருக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், நீரினால் பரவக்கூடிய நோய்கள் அதிகரிக்கக்கூடிய அபாயம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

ஹமாஸ் கடந்த 7-ம் திகதி மீது தனது முதலாவது தாக்குதலினை நடத்தியது, இதையடுத்து, ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.

தாக்குதலோடு நிறுத்திவிடாது, காசாவுக்கு வழங்கி வந்த குடிநீர், மின்சாரம், எரிபொருள் உள்ளிட்டவற்றையும் நிறுத்தியுள்ளது.

தீவிரமாகும் யுத்தம்! அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு

தீவிரமாகும் யுத்தம்! அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு

குடிநீர் நிறுத்தப்பட்டுள்ளது

இதனால், காசாவில் வசிக்கும் மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, மின்சார விநியோகம் இல்லாததால் இரவு நேரம் வெளிச்சமின்றி இருட்டில் அல்லல்படுகிறார்கள் அத்தியாவசிய மின்சார தேவைக்கான எரிபொருள் இல்லாததால் மின் விநியோகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இவை மாத்திரமல்லாது, காசாவுக்கு விநியோகித்து வந்த குடிநீர் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் குடிநீர் இன்றியும் தவித்து வருகின்றனர்.

வேறு வழியின்றி அசுத்தமான நீரைக் குடிக்க வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

தாக்குதல்களை உடன் நிறுத்துக! இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கை

தாக்குதல்களை உடன் நிறுத்துக! இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கை


இதன் காரணமாக, நீரினால் பரவும் நோய்களின் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், காசாவுக்கு குடிநீர் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை உறுதிப்படுத்தி மக்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று அகதிகளுக்கான ஐநா அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும், 24 மணி நேரத்துக்குள் காசா நகரில் இருந்து மக்களை வெளியேற வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறுவதோடு, காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை உறுதி செய்து அப்பாவி பொதுமக்களை காப்பாற்ற வேண்டும் என்றும் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. 


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?