முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 466

 தமிழர்கள் யார் முன்னும் தலை குனிந்தது கிடையாது; ஆனால் இப்போ இப்படியாகிட்டு.. ராகுல்காந்தி பேச்சு!



திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினரான ராகுல்காந்தி விமானம் மூலம் இன்று சென்னை வந்தார்.

 

அதனை தொடர்ந்து அடையாறில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி பிரசாரம் மேற்கொண்டார்.


பிரசார கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது,


இங்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் நன்றி. பாஜக மற்றும் அதிமுகவை எதிர்த்து போராட நான் இங்கு வந்துள்ளேன் என்பதை எனது அனுபவம் மூலம் உங்களுக்கு கூறுகிறேன்.


சில காலங்களுக்கு முன்னர் அமேதி தொகுதியில் நான் எம்.பி.யாக இருந்த பொது ஒரு இளமையான தலைவர் காங்கிரசில் இருந்து பாஜகவில் இணைந்தார். அந்த தலைவர் பாஜக தலைவர் அமித்ஷாவினை சந்திக்கும் புகைப்படத்தை நான் பார்த்தே. அந்த தலைவர் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் தற்போது பாஜகவில் இணைந்துகொண்டார்.


அந்த புகைப்படத்தில் அமித்ஷா ஒரு இருக்கையில் அமர்ந்துகொண்டிருக்கிறார். அந்த ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அவர் அமித்ஷாவின் காலை தொட்டு கும்மிட்டு நின்றுகொண்டிருந்தார். இது மிகவும் அவமரியாதை நிறைந்த உறவாக இது உள்ளது. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் அதிக அதிகாரம் மிக்கவரின் காலை தொட்டு கும்மிடுவது அவமரியாதையான நிலையில் உள்ளது. இது தான் பாஜகவின் உறவுமுறையாக உள்ளது.


நீங்கள் பாஜகவிலோ அல்லது பாஜக கூட்டணியில் இருந்தாலோ அவர்களது காலை தொட்டு கும்மிடுவது தான் அவர்களது உறவாக உள்ளது. நீங்கள் நரேந்திரமோடி அல்லது அமித்ஷா முன் தலைகுணிந்து நிற்கவேண்டும். அவர்களுக்கு வேறு எந்த உறவும் புரியாது. ஆனால், காங்கிரசை பொறுத்தவரை ஏற்றதாழ்வு அற்ற உறவு முறையாக இருக்க வேண்டும் என நாங்கள் எண்ணுகிறோம்.


எங்கள் பார்வையில் தமிழ்மக்கள் அனைவரும் எங்கள் சகோதர சகோதரிகள். தமிழக மக்களுடன் சரிசமமான மரியாதை, அன்பான உறவு முறையை மட்டுமே வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது.


அனைவரும் தங்களுக்கு தலைவணங்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ், பாஜக, நரேந்திரமோடி, அமித்ஷாவின் சித்தாந்தமாக உள்ளது. ஆனால், சகோதரத்துவம், சம உரிமை, சம மரியாதை என்பது காங்கிரசின் சித்தாந்தம்.


மிகவும் சிறந்த நாகரீகமும், சிறந்த மொழியும், சிறந்த பண்பாடும் கொண்ட தமிழகத்தின் முதலமைச்சர், பாஜக, ஆர்.எஸ்.எஸ், நரேந்திரமோடியின் காலை தொடுவதும், தலைகுனிந்து நிற்பதும் என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. இதை பார்க்கும்போது எனக்கு கோபம் வருகிறது.


இவ்வளவு தொன்மையான மக்களின் தலைவர் பாஜக மற்றும் நரேந்திரமோடியின் போன்றவர்கள் முன் தலைகுனிந்து நின்றுகொண்டிருக்கிறார். ஆகையால், தான் நான் இங்கு வந்துள்ளேன். தமிழக மக்களுடன் எனக்கு சமமான உறவு தேவைப்படுகிறது. அது மரியாதை நிறைந்ததாக இருக்கும். தமிழ்நாடு தமிழ்நாட்டில் இருந்து ஆளப்பட வேண்டுமே தவிர டெல்லியில் இருந்து இயங்கக்கூடாது என நான் விரும்புகிறேன்.


என்னைபொறுத்தவரை தமிழ்நாடு என்பது இந்தியா என்று நான் கூறினால் இந்தியா என்பது தமிழ்நாடு என்று நான் ஏற்றுக்கொள்ள வேண்டும். என்னை பொறுத்தவரை இந்தியா முன்பு தமிழ்நாடு கட்டாயப்படுத்தி தலைகுனிய வைக்கப்பட்டால் அது இந்தியா இல்லை. என்னைப்பொறுத்தவரை அனைத்து மக்களுக்கும், மொழிகளுக்கும், பண்பாட்டிற்கும் சமமான மரியாதை என்பதே இந்தியாவின் மையப்புள்ளியாகும்.


அமித்ஷா முன் தமிழக முதல்வர் தலைகுணிந்து நிற்க விரும்பவில்லை. எந்த தமிழனும் அவ்வாறு செய்ய விரும்பவில்லை. ஆனால், அமித்ஷா முன் தலைகுணிய முதலமைச்சர் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். முதலமைச்சர் செய்த ஊழல் காரணமாகவே அவர் அமித்ஷா முன் தலைகுணிந்து நிற்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.


தமிழக மக்களிடம் இருந்து முதலமைச்சர் சுரண்டிய பணத்தால் அவர் தற்போது மாட்டிக்கொண்டுள்ளார். அதனால் தான் நான் இங்கு வந்துள்ளேன். அதனால் தான் தமிழகத்தில் பாஜக ஆர்.எஸ்.எஸ். நுழைவதை தடுக்க நான் இங்கு வந்துள்ளேன்.


தமிழக அரசியலுக்கு பெரிய மாற்றம் தேவைப்படுகிறது. முந்தைய அரசுகள் போன்று கொடுக்க வேண்டிய தேவை தற்போது நிலவவில்லை. தமிழகம் சவால்களை சந்தித்துள்ளது. அருமையான மாநிலம் திறமையான அறிவுசார்ந்த இளைஞர்களை கொண்ட மாநிலம் தங்கள் குழந்தைகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடியாத சூழல் உள்ளது. இந்தியாவின் வலிமைக்கு உதவிய தமிழ்நாடு பொருளாதாரம் தற்போது அழிவை சந்தித்து வருகிறது. தமிழகத்திற்கு புதிய சிந்தனை, வழிமுறை தேவைப்படுகிறது. இதை வரும் திமுக அரசு நிச்சயம் செய்யும். தமிழக மக்களை மதிக்கும் அரசாக அது அமையும். டெல்லியால் கட்டுப்படுத்தப்பட்ட அரசாக அது இருக்காது.


தமிழக சிந்தனை மீது முழு தாக்குதல் நடத்தப்பட்டுகிறது. இதை குறைத்து மதிப்பிடாதீர்கள். இதற்கு பின் பெரிய பணபலம் உள்ளது. இந்த தாக்குதலுக்கு ஆர்.எஸ்.எஸ்., பாஜக பின்புலமாக உள்ளது. தமிழகம் அவர்கள் முன் மண்ணியிட வேண்டும் என பாஜக, ஆர்.எஸ்.எஸ். விரும்புகிறது.


அவர்களுக்கு தமிழர்களை பற்றி எதுவும் புரியாது. 3000 ஆண்டுகால வரலாற்றில் தமிழர்கள் யார் முன்னும் தலை குனிந்தது கிடையாது. தமிழர்களை யார் மரியாதையாக நடத்துகிறார்களோ அவர்களை தமிழர்கள் மரியாதையாக நடத்துவார்கள். இந்த மண்ணுக்கு மரியாதை கொடுத்தவர்கள் யாரும் அவமதிக்கப்பட்டதாக சரித்திரம் இல்லை. 3000 வருடத்தில் யாரையும்

அவமரியாதை செய்ததில்லை.


தமிழகத்தை நீங்கள் அரவணைத்தால் தமிழகம் உங்களை அரவணைக்கும். இதை நானும் எனது குடும்பத்தினரும் புரிந்துகொண்டுள்ளோம். நாங்கள் ஒருபங்கு கொடுத்தால் நீங்கள் இருபங்கு திருப்பி கொடுப்பீர்கள். அன்பு, மரியாதையை தவிர வேறு எந்த உறவும் உங்களிடம் இருந்து நான் பெற எண்ணுவதில்லை. தமிழகம் தான் இந்தியாவின் மையப்புள்ளி. தமிழகம் இல்லாமல் இந்தியா இல்லை. இந்தியாவின் சிந்தனைக்கு அடித்தளமே தமிழகம் தான். தமிழக பண்பாடு, மொழியை பாதுகாக்க வந்துள்ளேன். ஜனநாயகம் மீது தாக்குதல் நடைபெறுகிற்து. அதனால்தான் நான் இங்கு உள்ளேன். தமிழகம் எவ்வளவு முக்கியம் என்பது எனக்கு தெரியும்.


தொழில்முனைவோர், உற்பத்தி துறையின் தலைநகரம் தமிழகம். இந்த கட்டமைப்பு தாக்குதலுக்கு உள்ளாகுகிறது. பணமதிப்பிழப்பு இந்த கட்டமைப்பு மீது நடத்தப்பட்ட தாக்குதல். சிறுகுறு தொழில் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. ஜிஎஸ்டி தமிழக உற்பத்தி அமைப்பு மீது நடத்தப்பட்ட தாக்குதல்.


பிஜேபி, ஆர்.எஸ்.எஸ். இந்த தேர்தலில் வேரறுக்கப்படுவார்கள். முந்தைய தேர்தல் என்பது திமுக , அதிமுக கட்சிகளுக்கு இடையேயான மோதலாக இருந்தது. ஆனால், இது அதுபோன்றதல்ல. இது வித்தியாசமான தேர்தல். இது கட்சிகளுக்கு இடையேயான மோதலாக இல்லை. இந்த தேர்தல் என்பது அதிமுக, ஆர்.எஸ்.எஸ்., நரேந்திரமோடி, அமித்ஷாவுக்கும் தமிழக மக்களுக்கும் இடையேயான தேர்தல் ஆகும். அதிமுக, பாஜக இந்த தேர்தலில் முற்றிலும் தூளாக்கப்படுவார்கள். இதை திமுக கூட்டணி செய்யும். திமுக தலைவர் முக ஸ்டாலின் தமிழக முதலமைச்சராவார். சண்டை அத்துடன் நிற்காது. தமிழக மக்கள் மீதான தாக்குதல் அத்துடன் நிற்காது. டெல்லியில் இருந்து பாஜக, ஆர்.எஸ்.எஸ். நீக்கப்படும்போது தான் தமிழக மக்கள் மீதான தாக்குதல் நிற்கும்.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?